எல்லைவரைவுகள் எதுவுமில்லையென்றாலும் சாதாரணர்களின் குரலை வரலாறு பதிவுசெய்து கொள்வதில்லை. எழுதுவது தொடங்கிய காலந்தொட்டே இதுதான் நிலை. அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும், வாழும்காலத்தில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்பவர்களாக இருப்பதில்லை. இதுவும் அதிகாரம் உருப்பெற்ற காலத்திலிருந்தே தொடர்வதுதான். நெறிதவறுவதை மீறலெனக் கொள்ளாமல் ஒழுக்க இயல்பாய் ஏற்றுக்கொண்டுவிட்ட கருத்தியலுக்கு எதிராய், வாழ்வியல் போராட்டம் நடத்தும் ஒருத்தியின் கதை…