இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப்போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார்.
இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன;
ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை
வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன.
ஆலிவர் சேக்ஸ் உலகின் மிகப் பிரபலமான நரம்பியல் வல்லுநர்.
உடைந்துபோன மனங்கள் பற்றிய அவரது நிகழ்வு அறிக்கைகள்
நனவுநிலையின் புதிர்களுக்குச் சிறப்பான உள்ளொளி தருகின்றன.
— கார்டியன்
உள்ளொளியுடன் கருணையுள்ளத்தையும் காட்டுகிறது; மனத்தை
நெகிழச்செய்கிறது….திறமைமிக்க கதை சொல்லியின் தெளிவுடனும்
ஆற்றலுடனும் இந்த வரலாறுகளைத் தருகிறார்……மருத்துவம் தொடர்பான
நூலில் இது ஒரு மகத்தான படைப்பு.
–நியூ யார்க் டைம்ஸ்