1980 மற்றும் 90 களின் வளைகுடா வாழ்வை நாவலாக எழுதியிருக்கிறார். சவுதி அரேபிய நிலம் குறித்தும் அங்கு வேலை நிமித்தம் செல்லும் தமிழர்களின் தனியர் வாழ்வு குறித்தும் சுவாரசியமான மற்றும் இலகுவான மொழியில் எழுதப்பட்டிருக்கும் நாவல்.
சவுதியிலிருந்து கதை துபாய்க்கும் வந்து சேர்கிறது. கதையின் நாயகனான ஆரிஃப் பாஷாவிடமிருந்து நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்த – குடும்பம் மற்றும் வேலை சார்ந்து வளைகுடாவில் வசிக்க நேரிடும் நம் ஒவ்வொருவரின் தன்மைகளையும் பார்த்துக் கொள்ள முடியும்.-ஆபிதீன்