ஒரு சமகால வரலாற்றை, மிகப் பெரும் துன்பவியல் நிகழ்வை , அதுவும் தன் கண்ணால் பார்த்து பாதிக்கப்பட்ட ஒருவர் புதினம் வடிவில் தன் ஆற்றாமை, இயலாமை, வேதனை, கவலை ஆகிய அனைத்து உணர்வுகளையும் கொட்டி எழுதிய ஒர் நாவல் தான் “ரணங்கள்”. அட்டைப்படத்தில் குறிப்பிட்டதை போல் கடந்த 30 ஆண்டுகளாக கோவை மா நகரின் உடலில் மதங்களால் உண்டான கீறல்களின் உண்மையை அறிந்து கொள்ளும் விசாரணையே இந்த ரணங்கள் நாவல்.