ரஷ்ய மொழியில் எழுதிய “லெனினின் வாழ்க்கை கதை” என்கிற நவீனம் “லெனினுக்கு மரணமில்லை” என்கிற பெயரில் நூலாக வந்து உள்ளது. லெனின் பிறந்தது முதல் மரணம் வரை… பக்கத்தில் இருந்து பார்த்த… ரசித்த… பிரமித்த… ஒருவரின் எழுத்துப் போன்ற வீரியமிக்க நடையில் மரியா பிரிலெழாயெவா எழுதியுள்ளார். லெனினின் மன உறுதி – தீர்க்க தரிசனம் – கூரிய பார்வை – காதல் நெஞ்சம் – ஈரம் கசியும் இதயம் – புரட்சிகர சிந்தனை – மனிதத் தன்மையின் மகத்தான சாட்சிகள். ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடன் நாவலில் பேசப்படுகிறது. பூ. சோமசுந்தரம் மொழிபெயர்ப்பில் 1977ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளியானது. தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது.