அதே நேரத்தில் ஒரு நாவல் வாசிப்பு தரும் அனுபவம் என்பது திரைப்படம் தரும் அனுவத்தைக் காட்டிலும் பெரிதும் வேறுபட்டது. ஒரு நாவலைப் படிக்கும்போது நம் மனதில் ஓடும் திரைப்படமென்பது அவரவர் கற்பனையில் உருவாவது. அது பல நேரங்களில் வேறு யாரோ சிந்தித்து உருவாக்கும் திரைப்படத்தைவிடப் பல மடங்கு நமக்கு நெருக்கமானது. கதையில் ஒரு அழகி வரும்போது நாம் அழகென்று நினைக்கும் ஒரு அழகியை அந்த இடத்தில் வைத்துக்கொண்டு படிக்கிறோம். கதையின் நாயகனாக நாமே மாறி விடுகிறோம். அங்கே வீசும் காற்றையும் அது சுமந்து வரும் வாசனைகளையும் உணர்கிறோம். அந்த எழுத்துகளுக்குள் தொலைந்து போகிறோம். அந்த நாவலாசிரியரே வந்து திரைக்கதை எழுதி இயக்கினாலும் வாசகன் மனதினுள் ஓடிய திரைப்படத்துக்கு நியாயம் செய்ய முடியாது. இதன் காரணமாகவே வெட்டாட்டமும் நோட்டாவும் இரு வேறு படைப்புகளாகவே தொடர்ந்து உணரப்படும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இவ்விரண்டில் ஒரு படைப்பு இன்னொரு படைப்புக்கான வாசலாகவே தொடர்ந்து இருக்கும். .
– ஷான்.