“வேர்கள் ” என்பது சாதாரண எழுத்துகளின் வழியே பயணப்படும் வெறுமனே ஒரு புத்தகம் அல்ல. மாறாக, சரித்திரத்தின் இருட்டுப் பக்கங்களில் குருதிகளின் அடிச்சுவடுகளைப் பற்றி தனது வேரை அறியத் துடிக்கும் ஏழு தலைமுறை தாண்டிய கருப்பின மக்களின், மாண்டிங்கா முஸ்லிம்களின் இருப்பு பற்றிய தேடல்.