இதோ அம்மணமாய் இருப்பதால்தான் அழகாக இருக்கிறது வானம். அது தான் வானத்தின் வசியம் அது ஒரு திறந்தவெளி ‘ரகசியம்.’ “அப்படியெல்லாம் பெரிய கொம்பன் இல்லை நாம்” என்ற புரிதல் துலங்கும் நொடிகளில் தான் அமைதியாகிறது மனசு. சீனப்பெருஞ்சுவர் ஒரு சிறுகோடாகக் கூடத் தெரியாத உயரத்தில் இவர்களின் சிம்மாசனங்கள் எம்மாத்திரம்? நாடே தெரியவில்லை ஏன் இன்னும் சொம்பை கட்டி அழுகிறான் இந்த நாட்டாமை? மலைகளையே காணவில்லை தலைகளை எங்கே தேடுவது?