கார ஓடை கடந்து
காட்டெருமைப் பள்ளத்தாக்கில்
சிறுநாவல் மரத்தடியில்
தாயைத் தொட்டுக்
குழைந்து குழைந்து
முன்னும் பின்னும் துள்ளியாடும்
யானைக்குட்டிக்கு
‘ப்பச்சக்’ என்றொரு முத்தத்தை
கண் தந்த மாலையில்
தீர்ந்திருந்தது
காட்டை எரிக்கும்
பாறைகளின் அனல்.
– த.விஜயராஜ்