பற்ற வைத்த சிகரெட்டின் கங்கினைப் போன்ற கரைந்துகொண்டிருக்கின்ற ஒரு சிறு வெளிச்சம், அதன் அசைவுகளையும் நகர்வுகளையும் பதிவு செய்யும் துல்லியங்களோடு புனையப்பட்டிருக்கும் இளங்கோவின் கவிதைகள், உலகியலின் எல்லாவிதக் கட்டமைப்பிற்குள்ளும் இருந்தும் ஏதோவொரு கணத்தில் விலகமுடிகின்ற மனுஷத்துவத்தின் அகயிருப்பைப் பதிகின்றவை.
அது, வாரயிறுதியில் பவிஸான ஓர் உணவுவிடுதியில் ஓரமாக இருக்கும் நாற்காலியில் அமர்ந்து சாலையைக் கவனித்தபடி தனியாக உணவு உட்கொள்ளும் நவநாகரிக யுவதியின் கர்வத்தையும் கம்பீரத்தையும் ஒருங்கே உணர்த்துவதைப் போன்ற காட்சியாகப் புரிந்துகொள்ளலாம்.