1917 நவம்பரில் பத்து நாள்கள் இரத்தம் சிந்தாமல் நடைந்தேறிய ரஷியப் பாட்டாளிவர்க்கப் புரட்சி தோற்றுவித்த சோவியத் யூனியன் உருவாக்கிய கனவுகள், எதிர்பார்ப்புகள் ,அது சென்ற பாதையில் ஏற்பட்ட சறுக்கல்கள் ஆகியவற்றுக்கான சாட்சியங்களாக அக்காலத்திய மாபெரும் கலை இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறது இந்த நூல்.யெஸினின, மயாகோவ்ஸ்கி, பாஸ்டரநாக், அக்மதோவா, மாண்டெல்ஷ்டாம் போன்றோரின் ஆக்கங்களின் தமிழாக்கங்கள் வாசகர்களின் இரசனைக்கு விருந்து என்றால் சோவியத் யூனியன் இரண்டே.நாள்களில் தகர்ந்து விழுந்ததைப் பற்றிய விளக்கம் சிந்தனையைக் கிளரும்.