காஃபேவும், ஸ்பியர்ஸும் இந்த உலகம் முழுவதும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்மார்கள், குழந்தைகள் முதல் உள்ளாட்சி நிறுவனங்களில் திட்டங்களை நிறைவேற்றுவோர், கொள்கைகளை உருவாக்கும் மூத்த அரசு அதிகாரிகள், பன்னாட்டு வளர்ச்சித் தொழில் துறையினர் வரையான கதாபாத்திரங்கள் மூலம் துப்புரவில் கவனமற்ற ஒரு பொருள்பற்றிய, ஒரு சுகாதாரமற்ற கதையைக் கூறுகிறார்கள். அதிகப்படுத்தப்பட்ட நிதிகளையும், ஒருபோதும் பயன்படுத்தப்படாத கழிப்பிடங்களையும் பற்றி அவர்கள் எழுதுகிறார்கள். சாதிகளை ஒழிப்பதற்கும் ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டுவதை ஒழிப்பதற்கும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அறைகூவல் விடுக்கும் ‘எங்கே செல்கிறது இந்தியா?’ உரிய தருணத்தில் வந்துள்ள ஒரு முக்கியமான நூல்.