திரு. ஞானையாவின் இந்நூலைப் படிக்காமல் இன்றைய உலகத்தை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள இயலாது. ஒவ்வொரு நூலகமும் தன்னை வளப்படுத்திக் கொள்ள இந்நூலை வைத்துக்கொள்ளவும் இந்தியாவின் மகத்தான மொழிகளை உண்மையிலேயே விரிவாக்கிக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்நூலை தங்கள் மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். இந்திய வரலாற்றுக்கு அளிக்கப்பட ஒரு கொடையான இந்நூல் தொகுப்பு இதுவரை அறியப்படாமல் இருந்தபோதிலும், இந்திய இலக்கியமும் உண்மையான பண்பாடும் திரு. ஞானையாவுக்கு மிக கடமைப்பட்டுள்ளது. உலகப் பண்டுப் படைப்புகளின் தர வரிசையில் இடம்பெறத் தகுதி பெற்றது. திறமையாக ஆய்வுசெய்யப்பட்டு துணிச்சலாக எழுதப்பட்டுள்ள நூல். பயங்கரவாதத்தின் ஏறத்தாழ அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் பங்கையும் பாவங்களையும் இரட்டை அளவுகோலையும் சரியாக அம்பலப்படுத்துகின்றது.