ஃபிக்ஹுல் அகல்லியாத் என்றழைக்கப்படும் முஸ்லிம் சிறுபான்மை தொடர்பாக தமிழில் வெளி வரும் முதல் நூல்…இலங்கை அறிஞர் றவூஃப் ஸெய்ன் எழுதிய இந்த நூல், இந்திய/தமிழ் சூழலுக்கு ஏற்ப திருத்தப்பட்டு இலக்கியச்சோலை வெளியீடாக வந்துள்ளது.
நாம் சிறுபான்மையாக வாழ்பவர்கள், எமது பிரச்சனைகளும் அது உருவாக்கும் சமூக பொருளாதார கலாச்சார அரசியல் சூழமைவுகளும் வித்தியாசமானவை. எனவே எமக்கான தீர்வுகள் குறித்து ஓரளவு வித்தியாசமான பார்வை நமக்கு தேவை. அந்த பார்வை அறபு- முஸ்லிம் நாடுகளிலிருந்து தருவிக்க முடியாது.
சக சமூகங்களுடன் இணைந்து இணங்கியும் வாழ்வதற்கான வழிமுறைகள் எவை என்பதை சூழமைவில் தாம் வகுத்துக் கொள்ள வேண்டிய வாழ்வொழுங்கில் முதன்மைக்குரியவை எவை என்பதை இந்நூல் பேசுகிறது.