பிரிட்டிஷ் காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் சமூக-அரசியல் மற்றும் சட்ட வரலாற்றை ஆராய்ந்து, “பேச்சுச் சுதந்திரம்” என்ற கருத்திற்கு – ஜனரஞ்சகமாக வெளிப்பாட்டுரிமை எனப் படுவதற்கு – ஒளியூட்டிக் காட்டுகிறது. ஆபாசம், சுதந்திரப் பேச்சு என்பவை தொடர்பான இன்றைய சட்டத்தை ஆராய்கிறது. அரசியலமைப்பைச் சட்டமாக்கிய நிலை, இந்தியாவில் பேச்சுச் சுதந்திரத்தில் முக்கியமான வேறுபாட்டை உருவாக்கியுள்ளதா என்பதை இந்தப் புத்தகம் மதிப்பிடுகிறது. ஆழமான ஆராய்ச்சியுடன், அதிகாரபூர்வமான நிகழ்வுகளை அளிப்பதுடன், இதுவரை உண்மையாக எடுத்துரைக்கப்படாத விவாதங்களை முன்வைக்கிறது, இந்நூல்.