இந்தத் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன. இந்தக் கதைகளினூடாக வெளிப்படும் கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் துயரத்தின் சாயை படிந்த ஒரே முகம்தான். கமலதேவி ஒரு கதைக்குத் தேவையான துணைக் காரணிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் கடந்த காலமும் தற்காலமும் முன்னும் பின்னுமாக அலைவுறுகின்றன.
அதனால், கதையின் ஒவ்வொரு வரியும் முக்கியமானது. பெண்கள்தான் இவரது கதைகளின் முக்கியப் பாத்திரங்கள். பெண் எழுத்தாளர்களின் கதைகளில் இந்தத் தன்மை இயல்பாகவே அமைந்துவிடுகிறது.”