மனிதனின் தேவைகள் கூடிக்கொண்டே போகின்றன. எதைத் தேடுகிறோம் என தெரியாத ஓட்ட வேகத்தில் நின்று, நலமா எனக் கேட்கும் நியாயங்களுக்குக்கூட பதில் சொல்ல இங்கே யாருக்கும் நேரமில்லை. எழுத்துக்கள் அதைவிடக் கடினமாய் போய்க் கொண்டிருக்கிறது. படித்ததும் மிகச்சிக்கலாய் என்ன புரிந்து கொண்டோம் என த் தெரியாமல் ஒரு கடினமான புதிரைப்போல் குழம்பி நிற்கிறோம். இந்தச் சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சினேகிதனைப் போல் நம் தோள்களைத் தட்டி, அவைகளுக்கு ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டெடுக்கிறது கனகராஜனின் எழுத்துக்கள்.