“16” தொகுப்பில் பால்யத்தில் உலவியவர்கள் எல்லாம் இந்த தொகுப்பில் பதின்மத்தை கடந்து விட்டார்கள். இதில் அநேகக் கதைகளில் கிராமங்களிலிருந்து நகர்ந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்களின் மனவோட்டத்தை உணர்த்துகிறது. ஒரு கதை சொல்லியாகவே தன்னை நீட்டித்துக் கொண்டு, பெண்களின் ஆளுமையை அழுத்தமாகப் பதிவு செய்வதின் மூலம், கிராம, நகரத்திலிருக்கும் பாலியல் சிக்கல்அல் பற்றிச் சொல்லிடும் துணிச்சல் ரமேஷிற்கு இருப்பதை உணர முடிகிறது.