குடி’ யாண்டவர்கள் என்று அன்போடு அழைக்கப்படும் ” உற்சாகப்பான உறிஞ்சிகளை” (பானநேசர்கள்) இந்த அரசுகள் ஒன்றிணைந்து ‘மதுச்சாலைகள்’ அமைத்து, அவர்களுக்கும் பரமண்டலத்துக்குமான இணைப்புப் பாலமொன்றை தொகுதிவாரியாக இணைத்து கட்டி, பரமண்டலத்துக்கும், பானப் பயனாளிகளுக்கும் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி, மேற்கூறிய கனவான்கள் இறைவனடி சேரும் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மக்கள் தொகை நெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதிகாலத்திலிருந்தே பானமெனும் அருமருந்தைத் தங்கள் நாவுகளால் தீண்டி, சொர்க்கத்தை அருகில் வரவழைக்கும் மாமனிதர்கள் குறித்த பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தை இவர் தொடர் ஆராய்ச்சிகளின் வாயிலாகக் கண்டறிந்ததாக பி.பி.சி செய்திகளிடம் தெரிவித்தார். -பிரபு தர்மராஜ்