அசாதாரணத் தன்மை என்பது தலைவரின் தேர்ந்தெடுப்பு ஆகாது. எனினும், தலைமைக்குத் தன்னை ஆயத்தப் படுத்தும், ஒவ்வொருவருக்கும் தானாகவே அமைய வேண்டிய, தவிர்க்க முடியாத ஒன்றாகும். அச்சமற்ற நிலையில் உள்ளவரால்தான் பிறரை ஆர்வப் படுத்தி அழைத்துச் செல்ல முடியும். இவ்வகையில், வையகத்து வரலாற்றில் இதற்கு ஒரே ஊர் எடுத்துக்காட்டு, அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை மட்டும்தான் என்றால், அது மிகையாகாது. இந்த ஒப்பற்ற ஆளுமையின் காரணமாகத்தான், அன்னாரின் தோழர்களான சீடர்கள் நபிக்குக் கட்டுப் படுவதில் ஓர் உயர்ந்த முன்மாதிரியைக் காட்டிச் சென்றுள்ளார்கள். அவரை அவர்கள் நேசித்தார்கள்; அவர் அவர்களை நேசித்தார்.
Adirai Ahmad [ அதிரை அஹ்மது – தமிழாக்கம்]