இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆதாரமிக்க வாழ்க்கை வரலாறுகளின் தொகுப்பாக இந்த நூல் கொண்டாடப்படுகிறது. இந்த நூலில் பெரும்பாலும் நபியவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான 63 வருடக்காலப் பகுதியில் இடம்பெற்ற அரசியல், சமூகம்சார் நிகழ்வுகள், நபியவர்களின் ராஜதந்திர நகர்வுகள், யுத்தமுறைகள், ஆட்சித் திட்டமிடல், பரந்துபட்ட ஆளுமை என்பவையே சிலாகித்து கூறப்பட்டுள்ளது.
1976 ல் நடந்த இறைத்தூதர் வாழ்க்கை வரலாறு குறித்த உலகளாவிய மாநாடு நடந்தது. நபி ஸல் வாழ்க்கை வரலாற்றை எழுதி சமர்பிப்போர்க்கு மிகப்பெரும் தொகையையும் அறிவித்திருந்தது. அப்படியாக வந்த 1181 ஆய்வுகளில் முதல் பரிசை பெற்றது இந்தியாவைச் சேர்ந்த ஸஃபியுர் ரஹ்மான் அவர்களின் இப்புத்தகமே ஆகும். 50,000 ரியால்கள் இதற்காக வழங்கப்பட்டது. துல்லியமான ஆதாரங்களுடன் வரலாறுகளை முழுமையாக எடுத்துக்கூறும் நூலாக இது பார்க்கப்படுவதால் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வோர் முஸ்லிம் வீடுகளின் புத்தக அலமாரிகளில் குர்ஆன் , தப்சீர் வரிசையில் கட்டாய இடம் பிடித்தது.