அண்ணல் நபியை பற்றிய வரலாற்று நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளியாகியுள்ளன. தமிழிலும் நூற்றுக்கணக்கில் வெளியாக்கியிருந்தாலும் அவற்றில் சில நூல்களே சிறப்பான செய்திகளைச் சொல்கின்றன. அவ்வரிசையில் இந்நூலும் சிறப்பான இடத்தை பிடிக்க வேண்டும் என விரும்பி அதற்கான பணிகளை இந்நூலாசிரியர் நன்றாக செய்துள்ளார் என்பதை நூல் படிப்பவர்கள் உணரலாம். அண்ணலார் காலத்துக்கு முந்திய நிலைமைகள், அண்ணலார் கால நிலைமைகள் என செய்திகள் விரிந்து இஸ்லாமிய எழுச்சி வரை நூல் பல்வேறு சங்கதிகளை பேசுகிறது.