ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறு என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் வரலாறு அல்ல! மனித இனத்தின் தோற்றம், அவனுடைய படைப்பின் காரணம், அவனுக்கு வழங்கப்பட்ட தகுதிகள் – திறமைகள் போன்றவற்றை அறிவதற்கான தேடுதல். இந்த உலகைப் பற்றியும் உலகின் படைப்பைப் பற்றியும் உலகில் மனிதன் எவ்வாறு பிறந்தான்? எதற்காகப் பிறந்தான்? அவனுடைய பிறப்பிற்கான காரணம் என்ன? என்பதைப் பற்றியும், இறைவனின் வேதம் என்று நாம் நம்பும் குர்ஆன் என்ன கூறுகின்றது? என்பதைப் பற்றி இந்நூல் விளக்குகிறது. |