1.ரிக் வேதம்: ” ரிக்” என்றால் “ஸ்தோத்திரம்” . பிற்காலத்தில் சுலோகம் எனச் சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேத காலத்தில் ” ரிக்” எனப் பெயர். 2.யஜுர் வேதம்: “யஜ்” என்றால் “வழிபடுவது ” எனப் பொருள். யக்ஞம்( வேள்வி) தொடர்பாக வழிபாட்டு முறைகளை விவரிப்பதே யஜுர் வேதம். ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களை வேள்வி என்ற யாகத்தில் பொருத்தி கொடுப்பதையே யஜுர் வேதம் செய்கிறது. 3.ஸாம வேதம்: ரிக் வேதத்தில் துதிகளாக இருக்கும் மந்திரங்களில் பலவற்றை கானமாக ஆக்கித் தருவதே ஸாம வேதம். ரிக் வேதத்தை ஸாம கானமாக நீட்டிப் பாட விதிகள் செய்யப்பட்டதே ‘ஸாம வேதம்.’ “ஸாமம்” என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது எனப் பொருள்படும். 4.அதர்வணம்: ( அதர்வ வேதம்) அதர்வன்= புரோகிதர். அதர்வா என்ற ரிஷியின் மூலம் பிரகாசமடைந்தது அதர்வண வேதம். அதில் பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்ளவும், எதிரிகளை அழிப்பதற்கும் மந்திரங்கள் உள்ளன. உரைநடை போலவும், செய்யுள்களாகவும் மந்திரங்கள் இதில் இருக்கிறதாம்.