Galaxy Books

புத்தகப் பார்வை : கொலைஞானம் (நாவல்)

பரிவை சே.குமார் கொலைஞானம்- மருத்துவர் சூ.மா.இளஞ்செழியன் அவர்கள் எழுதி, கேலக்ஸி பதிப்பக வெளியீடாக, ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியான நாவல் இது. கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியிருந்தாலும் எழுத்தாளருக்கு இது முதல் நாவல். தான் பிறந்த நாகர்கோவில் பகுதியைக் கதையின் களமாக எடுத்துக் கொண்டிருப்பதால் எதையும் அவர் வலிந்து திணிக்காமல் வாசிப்பவரை ஈர்த்துக் கொள்ளும்  எழுத்தில் கதை இயல்பாகப் பயணிப்பது சிறப்பு. ஆசிரியர் உரையில், ’60 லட்சம் வருடங்களுக்கு முன்பு பரிணாமத்தின் படிகளில் மனிதன் ஏறி […]

புத்தகப் பார்வை மயக்கம் என்ன

மயக்கம் என்ன- மலையாள எழுத்தாளர் கீதா மோகன் எழுதிய ‘மத்து’ என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் ‘மயக்கம் என்ன’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்த நூலை கேலக்ஸி பதிப்பகம் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டது. இதில் இருக்கும் கதைகள் அனைத்தும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கதைகளையே கதாபாத்திரம் சொல்வதாய் எழுதியிருக்கிறார். மொழிமாற்றம் என்பது உறுத்தாத மொழியில் இருப்பது, குறிப்பாக அப்படியே மாற்றாமல் கதையை உள்வாங்கி எழுதியிருப்பது மிகச் சிறப்பு. மலையாளத்தில் […]

புத்தகப் பார்வை : ஆரச்சாலை

திப்பு ரஹிம் தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிகம் நாவல்கள் தான் மக்களை வியாபித்து இருந்தது. ஆரம்பத்தில் குடும்பக் கதைகளாகவும், பிறகு சமூக, காதல் கதைகளாகவும் இருந்துள்ளது. பிறகு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட நூல்கள் என்றால் அது டிடெக்டிவ் நாவல்கள் தான். அதிலும் குறிப்பாக நான் அதிகம் வாசித்தது சுபாவினுடைய நாவல்கள். தொலைக்காட்சியின் வரவாலும் நாடகத் தொடர்களாலும் மெல்ல மெல்ல புத்தகங்களின் ஆதிக்கம் குறைய தொடங்கியது. கொஞ்ச காலம் கழித்து […]

புத்தகப் பார்வை : திருடன் மணியன்பிள்ளை

பால்கரசு சசிகுமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர் ராஜா எனக்குப் பரிந்துரைத்த புத்தகம் ‘திருடன் மணியன்பிள்ளை’. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சுயசரிதை நாவல் என்றாலும் எழுத்துநடை எளிமையாகவும் வாசிப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருந்தது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள இரவிபுரம் என்னுமிடத்தில் மிகவும் பிரபலமான ‘கொடுந்தற’ என்ற குடும்பத்தில் ஒருவனாகப் பிறந்த மணியன்பிள்ளை, காலப்போக்கில் எப்படி குற்றவாசனையுள்ள மனிதனாக மாறுகிறார் என்பதைப் பேசும் புத்தகம்தான் இது. தன்னுடைய அறியாப் பருவத்தில் உறவுக்காரப் பெண்ணொருத்தியின் தூண்டுதலின் காரணமாக முதல் […]

புத்தகப் பார்வை : சமவெளி

பரிவை சே.குமார்.  சமவெளி- எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. நான் வாசித்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு சிறு இசை’, அதன்பின் சமீபத்தில் ஊருக்குப் போனபோது பழனி ஐயா வாசிக்கக் கொடுத்த நான்கு புத்தகத்தில் ‘தீரா நதி’, ‘கமழ்ச்சி’ இரண்டையும் வாசித்து முடித்துவிட்டு ‘சமவெளி’யைக் கையில் எடுத்தேன். சமீபத்தில் வாசித்த மற்ற இரண்டையும் விட சமவெளியில் இருந்த கதைகளை உள்வாங்கிக் கொண்டு மீண்டும் கதையாக நம்மால் வெளியில் சொல்ல முடியும் என்பதாகவே […]

அத்தியாயம் – 8 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர் திப்பு ரஹிம் ————————————————–முந்தைய பகுதிகளை வாசிக்கஅத்தியாயம் – 1அத்தியாயம் – 2அத்தியாயம் – 3அத்தியாயம் – 4அத்தியாயம் – 5அத்தியாயம் – 6அத்தியாயம் – 7————————————————– யூதர்களை கிறிஸ்தவ ரோம அரசர்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியேற்றிய பொழுது அவர்கள் அனைவரும் தஞ்சம் புகுந்த இடம் மதினாவை சுற்றி இருக்கக்கூடிய இந்த இடங்கள் தான். அப்போது மதினாவில் இருந்த அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுக்கு இடையே பகை இருந்தது. ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள். நபியவர்கள் […]

‘வாத்தியார்’ – விமர்சனக் கூட்டம்

பரிவை சே.குமார். சனிக்கிழமை (27/07/2024) மாலையை இனிமையாக்கிய கேலக்ஸியின் இரண்டு நிகழ்வுகளில் முதலாவதாய் ‘மூக்குக் கண்ணாடி’ வெளியீடு முடிந்தபின் இரண்டாவதாய் எனது ‘வாத்தியார்’ சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. வாத்தியார் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் முதல் விமர்சனக் கூட்டம் நேற்றுத்தான் நடைபெற்றது. பாலாஜி அண்ணன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். முதலில் பேச வந்த சகோதரர் பால்கரசு கையில் நாலைந்து பேப்பர் இருந்தது. எழுத்தாளர் சிவா என்னங்க பேப்பர்ல பிரிண்ட் அவுட்லாம் […]

புத்தகப் பார்வை : தீரா நதி

ஆசிரியர் : வண்ணதாசன் ‘இன்னும் தீ தான் தெய்வம்நீர் தான் வாழ்வு’ இந்த வரிகளைத் தனது ஒப்புதல் வாக்குமூலம் என்னும் முன்னுரையில் இறுதி வரியாக எழுதியிருப்பார். இது எத்தனை சத்தியமான வரிகள். தீரா நதி என்னும் இந்தத் தொகுப்பில் ‘ஒப்புதல் வாக்குமூலம்’, பின்னுரையாக எழுதப்பட்ட ‘மணலின் கதை’ தவிர்த்து இதில் மொத்தம் ஆறு கதைகள் இருக்கின்றன. பெரும்பாலும் எல்லாமே சற்றே பெரிய சிறுகதைகள்தான். அதுவும் ‘தீரா நதி’ என்னும் கதை எழுபது பக்கங்களுக்கு மேல் எடுத்துக் கொண்ட […]

புத்தகப் பார்வை : அவர் தான் மனிதர்

ஆசிரியர் பேராசியர் முனைவர் மு.பழனி இராகுலதாசன் லெனின் நினைவு நூற்றாண்டு வெளியீடாக காலம் பதிப்பகத்தில் வந்திருக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் மிகச் சிறிய புத்தகம் இது. இச்சிறுநூல் லெனின் என்னும் சாதாரண மனிதரை நமக்கு மிக அழகாக, அருமையாக அறிமுகம் செய்கிறது. குராயூர் எரியீட்டி என்னும் அழகன் வாத்தியார் அவர்கள் தனது நூன்முகத்தில் ‘பாடகர் தபோய் என்பவர், எவரது சிந்தனைகள் எப்போதும் மக்களுடனே இருக்கின்றனவோ, அவர் தான் மனிதன் என்ற கௌரவமிக்க பெயருக்குத் தகுதியானவர் […]

புத்தகப் பார்வை : திருவிழா (நாவல்)

அழகுராஜா இதுவரை வாசித்த நூல்களில் தேனி கவிப்பேரரசு வைரமுத்து, ராமநாதபுரம் எழுத்தாளர் வேலராமமூர்த்தி, செக்கானூரணி (மதுரை to உசிலம்பட்டி மத்தியில் இருக்கும் ஊர்) எழுத்தாளர் கவிஞர் ஏகாதசி இவர்களின் எழுத்தின் மூலம் அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலையும், வட்டார பேச்சையும் வாசித்து ரசித்த நான், இந்தத் திருவிழா நூலின் மூலம் சிவகங்கை மாவட்டம் சுற்றி உள்ள மக்களின் வாழ்வியலையும், வட்டாரப் பேச்சையும் ரசித்து உள்ளேன். முகநூலில் நித்யா குமார் பெயரில் இருக்கும் பரிவை சே.குமார் நண்பராகத்தான் எனக்கு […]

Shopping cart close