பரிவை சே.குமார்
ஒரு செயலைத் தொடர்ந்து செய்ய நினைப்பது வேறு அதைச் செய்து முடிப்பது வேறு. நானெல்லாம் தினமும் நடைபயிற்சிக்குப் போக வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்தாலும் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் போகாமல் இருக்கலாமே என்ற எண்ணம் மனசுக்குள் லேசாக எழுந்தால் போதும் அன்றைய நாள் நடைபயிற்சிக்கு போவதில்லை. அப்படித்தான் வாசிப்பும்… தினமும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் தொடர்ந்து வாசிப்பது என்பது நிகழாமல் போய் விடும்.
கேலக்ஸி இணைய தளத்தில் பாலாஜி அண்ணன், நான் வாசித்த சிறுகதைகள் குறித்து வாசிக்கப் போகிறேன் என்று சொன்னார். பத்து, இருபது கதைகளை வாசிப்பார் என்று நினைத்திருந்தால் தொடர்ந்து 100 கதைகளை வாசித்து முடித்தார். வியப்பாக இருந்தது. அதுவும் என்ன அலுவல், நிகழ்வுகள் இருந்தாலும் தொடர்ந்து வாசித்தார். நிறைய புதியவர்களின் எழுத்துக்களை வாசித்தார்.
நூறு சிறுகதைகளை வாசித்து முடித்ததும் அடுத்து எதாவது செய்யணுப்பா… நூறு நாள் நூறு சிறுகதை மாதிரி எதவாது செய்யலாம்ன்னு இருக்கேன்… என்னப்பா செய்யலாம் என எங்களிடம் கேட்டு விட்டு அவரே நூல் அறிமுகம் மாதிரி செஞ்சிடலாம்… அடுத்த நூறு நாள் நூறு நூல்கள் என்றார். இப்போது உண்மையிலேயே மலைப்பாக இருந்தது. சிறுகதைகளை அவ்வப்போது வாசித்து விட்டுப் பேசிவிடலாம். நூல்கள் என்றால் சும்மா ஏனோதானோன்னு எல்லாம் பேசிட முடியாது. புத்தகங்களை வாசித்து அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை விரிவாகப் பேச வேண்டும். இது நூறு நாள் போகுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
ஆனால் அவரோ தொடர்ந்து நூறு நூல்களைப் பற்றிப் பேசி முடித்திருக்கிறார். தொடர்ந்து 200 நாட்கள் இணைய வெளியில் பேசுதல் என்பது மிகப்பெரிய விஷயம். அதற்கான மெனக்கெடல், உழைப்பு என அவரும் அவரைத் தொடர்ந்து வீடியோ எடுத்தவர்களும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
நூறு சிறுகதைகள்… நூறு புத்தகங்கள் முடிஞ்சிருச்சு… இனி அடுத்து என்ன..? என்ற கேள்விக்கே இடமில்லாமல் இதோ நூறு கட்டுரைகள் எனத் தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்துவிட்டார். வாழ்த்துக்கள் பாலாஜி அண்ணே.
சிறுகதைகள், நூலறிமுகம் என இரட்டை சதம் அடித்து இப்போது கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்து மூன்றாவது சதத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் பாலாஜி அண்ணன். தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்.
இது சாதரண விசயமல்ல… அவர் தொடர் பயணத்தில் அவருக்கு மட்டுமின்றி அவருடன் இணைந்து பயணிக்கும் அவரின் உறவுகள் மற்றும் நட்புக்களுக்கும் வாழ்த்துகள்.
வீடியோக்களை கேலக்ஸி இணைய தளத்தில் பார்க்கலாம்.
அவர் இதுவரை அறிமுகம் செய்த நூறு சிறுகதைகள் மற்றும் நூறு புத்தகங்களின் பெயர்களும் அதை எழுதிய எழுத்தாளர்களின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
நூறு சிறுகதைகள்:
2. யாரும் யாரும் அல்ல – இத்ரிஸ் யாக்கூப்
3. கிழவர்களின் விளையாட்டு – எஸ். ராமகிருஷ்ணன்
4. கனவுக் காட்சி – சுரேஷ்குமார் இந்திரஜித்
5. சிவப்பு ரப்பர் வளையல் – ஆமினா முஹம்மத்
6. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் – தயாஜி
7. சொல் கொன்றது – அரிசங்கர்
8. தேடிக்கொண்டு – அரவிந்த் கார்த்திக்
9. மாப்ள – இத்ரிஸ் யாக்கூப்
10. பம்பரம் – பரிவை சே. குமார்
11. அவன் அப்படித்தான் – ஜெஸிலா பானு
12. வாஸ்கோ வெறியாட்டம் – எஸ். ராமகிருஷ்ணன்
13. சங்கும் சாமியும் – தொ. பரமசிவன்
14. ஆக்ஷன் பாபு – மம்முட்டி – கே. வி. ஷைலஜா
15. அமிர்தத்துளி – விஜி ரவி
16. பின்னல் இழைகள் – ராகவன்
17. சுயம் – ‘அலை’ யுவராஜன்
18. அம்மாப்பொண்ணு மாமி – இத்ரிஸ் யாக்கூப்
19. கல் மனசு – ராஜா செல்லமுத்து
20. எல்லோரும் கொண்டாடுவோம் – கல்பனா சன்யாசி
21. இருளப்பசாமியும் 21 கிடாயும் – வேல ராமமூர்த்தி
22. காலங்கள் மாறும் – அனந்த் ரவி
23. நட்புக்குத் தங்க மனசு – ஆர் வி சரவணன்
24. வேலி – பரிவை சே குமார்
25. அண்டி – ‘தெரிசை’
26. அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் – பூபதி பெரியசாமி
27. அவள் மனதில் – ஜே பி ஜனார்த்தனன்
28. ஊருக்கு உபதேசம் – ஜெயந்தி மோகன்
29. பென்சன் பணம் – தசரதன்
30. ஜீவநதி – பரிவை சே. குமார்
31. மது ஒழிப்பு – மணிராம் கார்த்திக்
32. அந்நியன் – மலர் மதி
33. தாகம் | இறைவியின் பாதையில் | பிரபாவதி செந்தில்
34. ஜிலேபியா ? ஜாங்கிரியா ? | கமலா முரளி
35. மழையில் நனையாத குடை | இத்ரீஸ் யாக்கூப்
36. தப்புச்சுழி | ப்ரிம்யா கிராஸ்வின்
37. உயிர்த்துடிப்பு | பரிவை சே. குமார்
38. நான் ஏன் இப்படி? | இரா. கலைச்செல்வி
39. உருத்து | ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
40. தனிக்குடித்தனம் | ஜெயா மணாளன்
41. தெனாலி ராமன் | பீர்பால் கதைகள்
42. சில புதிர்கள் | எஸ். ராமகிருஷ்ணன்
43. விளா மரமும் தமிழரசனும் | அபு ஃபர்ஹானா
44. தாதி | ஆர். ஷஹினா | சிதம்பரம் ரவிச்சந்திரன்
45. கனவு மெய்ப்படவில்லை | அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
46. யானையும் மூப்பனும் | சிறுகதை
47. காதல் | கு. அருணாசலம்
48. மேன்மக்கள் மேன்மக்களே | குடிமையியல்
49. விருப்பம் | பா வெங்கடேஷ்
50. வாழ்வின் நோக்கம் | ஷாராஜ்
51. 51. எங்கே அவள் | வேற்று திசை | ஜெஸிலா பானு
52. கடைசி பக்கம் | நிதர்ஸனா | ஒரு பக்க கதை
53. பணிவு | நீதிக்கதை
54. புயலடித்தது | சாந்தி மாரியப்பன் | சிறுகதை
55. எனக்கு மட்டும் ஏன் இப்படி | சுஶ்ரீ | சிறுகதை
56. சொர்க்கத்தில் கிரிக்கெட் | கோழிமுட்டையும் முதலாளியும் | நகைச்சுவை கதைகள்
57. ரமணி பாட்டி | இரா. கலைச்செல்வி | சிறுகதை
58. ட்ரான்ஸ்ஃபர் | தாமோதரன் | சிறுகதை
59. நேர்மை என்பது இவ்வளவுதான் | தாமோதரன் | சிறுகதை
60. காந்தி நோட்டு | மணிராம் கார்த்திக் | குறுங்கதை
61. புது பைக் வேண்டும் | ஆர் வி சரவணன் | சிறுகதை
62. சமம் | இரா. வசந்தராசன் | ஒரு பக்க கதை
63. இந்தியாவின் நாசித் துவாரம் | எனது இந்தியா | எஸ். ராமகிருஷ்ணன்
64. இந்தியாவின் டிராகுலா | எனது இந்தியா | எஸ். ராமகிருஷ்ணன்
65. அட்மிஷன் | மணிராம் கார்த்திக் | ஒரு பக்க கதை
66. பூமர் அங்கிள் | மஞ்சுளா சுவாமிநாதன் | ஒரு பக்க கதை
67. மிக்சர் | ஷா. காதர்கனி | சிறுகதை
68. சித்தர்கள் | தொ. பரமசிவன் | பண்பாட்டு அசைவுகள் | கட்டுரை
69. வரன் | மணிராம் கார்த்திக் | சிறுகதை
70. வேலை | கிறுக்கி | அ. ஜாஹிர் ஹுசைன் | இஹ்சான் அப்துல் குத்தூஸ் | மொழிபெயர்ப்பு சிறுகதை
71. அவசரப்படாதே | சிறுகதை
72. தர்ப்பணம் | சிறுகதை
73. அவரவர் வாழ்க்கை | சிறுகதை
74. பாட்டில் | டேனியல் வி ராஜா | ஒரு பக்க கதை
75. ஆங்கிலேயப் பாண்டியன் | பீட்டர் பாண்டியன் | பண்பாட்டு அசைவுகள் | தொ. பரமசிவன்
76. வந்த நோக்கம் ? | சிறுகதை
77. தண்டனைக்குப் பின்னால் | எஸ். ராமகிருஷ்ணன் | எனது இந்தியா | கட்டுரை
78. கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன? | பெருந்தேவி | குறுங்கதைகள்
79. பிரிவு | நித்யா | சிறுகதை
80. சரிவு | கண்ணன் விஸ்வகாந்தி | சிறுகதை
81. தெய்யம் | ஜெஸிலா பானு | கீதா மோகன் | கேலக்ஸி நூல்
82. தாய் மனம் | என். கணேசன் | சிறுகதை
83. வாழ்வுச்சாலை | இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதை
84. பறையரும் மத்தியானப் பறையரும் | தொ. பரமசிவன்
85. ராசுவின் டீக்கடை | சிறுகதை
86. மகன் வீடு | ராஜா செல்லமுத்து | குறுங்கதை
87. பொன்னாத்தா இனி பேசமாட்டா | ஸரோஜா சகாதேவன் | சிறுகதை
88. அது ஒரு கலை | நித்வி | சிறுகதை
89. ஏழ்மையின் கடவுள் | ஜப்பானிய நாட்டுப்புறக் கதை | ஷாராஜ்
90. பேச பயம் எனக்கு | பரிவை சே. குமார் | சிறுகதை
91. கோயில் மாடு | வைரமுத்து | சிறுகதை
92. மந்திரச்சொல் | பா. ராஜா | சிறுகதை
93. பொருளாதாரச் சுதந்திரமும் பெண் விடுதலையும் | ஹேமா | கட்டுரை
94. சுன்னத்தொப்பி | மீரான் மைதீன் | சிறுகதை
95. மூன்றடி மண் | அபுல்கலாம் ஆசாத் | குறுங்கதை
96. இலக்கு | அபுல் கலாம் ஆசாத் | குறுங்கதை
97. பயன்தூக்கார் செய்த உதவி | சிறுகதை
98. சார் | வசந்தி முனிஸ் | சிறுகதை
99. உடற்கட்டு | அபுல் கலாம் ஆசாத் | குறுங்கதை
100. ஆகாத தீதார் | ஆமினா முகம்மத் | சிறுகதை
நூறு புத்தகங்கள்:
நூல் 1 | அறுகு | பரிவை சே. குமார் | சிறுகதைத் தொகுப்பு
நூல் 2 | ஆரச்சாலை | சென் பாலன் | நாவல்
நூல் 3 | காவல் கோட்டம் | சு. வெங்கடேசன் | நாவல்
நூல் 4 | நலம் வாழ | Heatlh & Well being | ஜெஸிலா பானு | கட்டுரை
நூல் 5 | சான்றோர்… பாலர் | மு. பழனி இராகுலதாசன் | கட்டுரைகள்
நூல் 6 | மைவண்ணன் இராம காவியம் | ’காப்பியக்கோ’ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் | காப்பியம்
நூல் 7 | குட்டிகோரா | ‘தெரிசை’ சிவா | சிறுகதைகள்
நூல் 8 | கூத்தாட்டு | நா. மம்மது | கட்டுரை
நூல் 9 | கொலைஞானம் | சூ. மா. இளஞ்செழியன் | நாவல்
நூல் 10. மருள் | பரிவை. சே. குமார் | நாவல்
நூல் 11 | கதையல்ல வாழ்வு | ஹேமா | கட்டுரை
நூல் 12 | ஆக்கிரமிப்பு | அபுல்கலாம் ஆசாத் | குறுங்கதைகள்
நூல் 13 | எனது இந்தியா | எஸ். ராமகிருஷ்ணன் | கட்டுரை
நூல் 14 | தொன்ம அறம் | துரை. அறிவழகன் | குறுநாவல்
நூல் 15 | மழை ஓய்ந்த பொழுது | நிழலி | குறுநாவல்
நூல் 16 | மழையில் நனையாத குடை | இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதைகள்
நூல் 17 | மூக்குக் கண்ணாடி | திப்புரஹிம் | நாவல்
நூல் 18 | மயக்கம் என்ன | ஜெஸிலா பானு | மத்து | கீதா மோகன் | சிறுகதைகள் | மொழிபெயர்ப்பு | மலையாளம்
நூல் 19 | பிரதாப முதலியார் சரித்திரம் | மாயூரம் வேதநாயகம் பிள்ளை | முதல் புதினம் | நாவல்
நூல் 20 | ஸ்னெஹி எனும் நாய் | சிவமணி | சிறுகதைகள்
நூல் 21 | ஹயவதனா | க்ரிஷ் கர்நாட் | Hayavadana | Girish Karnad | Drama | நாடகம்
நூல் 22 | மராம்பு | நசீமா ரஸாக் | குறுநாவல்
நூல் 23| தோப்பு | கேலக்ஸி பதிப்பகம் | சிறுகதைகள்
நூல் 24 | The old man and the sea | Ernest Hemingway | நாவல்
நூல் 25 | பாதைகள் உனது பயணங்கள் உனது | ஹேமா | கட்டுரைகள்
நூல் 26 | காடு | ஜெயமோகன் | நாவல்
நூல் 27 | பிராந்தியம் | நாரயணி கண்ணகி | திரை நாவல்
நூல் 28 | La Place | Annie Ernaux | தந்தைக்கோர் இடம் | எஸ் ஆர் கிருஷ்ணமூர்த்தி | French Novel
நூல் 29 | கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன | பெருந்தேவி | குறுங்கதைகள்
நூல் 30 | உடல் வடித்தான் | அபுல்கலாம் ஆசாத் | நாவல்
நூல் 31 | வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் | ந. முருகேசபாண்டியன்
நூல் 32 | கோடைகாலத்தின் சாலை | பா. ராஜா | சிறுகதைகள்
நூல் 33 | விடைத்தாளுக்கு வெளியே | ராஜலெட்சுமி | கட்டுரை
நூல் 34 | வேலை நேரம் | இரா தங்கப்பாண்டியன் | குறுநாவல்
நூல் 35 | தடீச்சா பிரதா | நௌஷாத் கான். லி | சிறுகதைகள்
நூல் 36 | தாச்சி | ‘தெரிசை’ சிவா | சிறுகதைகள்
நூல் 37 | சர்வம் காதல்மயம் | கல்பனா சன்யாசி | நாவல்
நூல் 38 | தேசாந்திரி | எஸ் ராமகிருஷ்ணன் | கட்டுரை
நூல் 39 | பண்பாட்டு அசைவுகள் | தொ. பரமசிவன்
நூல் 40 | சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை! | சுகுணா திவாகர் | கட்டுரை
நூல் 41 | தண்ணீர் | அசோகமித்திரன் | நாவல்
நூல் 42 | செங்காந்தள் | மதுமிதா | நாவல்
நூல் 43 | மஞ்சு | எம் டி வாசுதேவன் நாயர் | ரீனா சாலினி | நாவல்
நூல் 44 | அஞ்சுவண்ணம் தெரு | தோப்பில் முகம்மது மீரான் | நாவல்
நூல் 45 | மூஸா நபி வரலாறு | ஜெஸிலா பானு
நூல் 46 | நட்சத்திர வானில் | புனிதா பார்த்திபன் | நாவல்
நூல் 47 | முழுநிலவின் முன்துணையே | ‘அலை’ யுவராஜன் | நாவல்
நூல் 48 | கோவேறு கழுதைகள் | இமையம் | நாவல்
நூல் 49 | அந்தோணியின் ஆட்டுக் குட்டி | மா. கமலவேலன் | நாவல்
நூல் 50 | மூன்றாம்பிறை | மம்முட்டி | கே. வி. ஷைலஜா | வாழ்வனுபவங்கள்
நூல் 51 | நம் நாயகம் | ஜெஸிலா பானு | சிறுவர் நூல்
நூல் 52 | பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | பெருமாள் முருகன் | நாவல்
நூல் 53 | கம்பா நதி | வண்ணநிலவன் | நாவல்
நூல் 54 | கொதிப்பதும் குளிர்வதும் | அனந்த் ரவி | நாவல்
நூல் 55 | கனலி | ஷோபியா துரைராஜ் | கவிதை
நூல் 56 | ஒரு கடலோர கிராமத்தின் கதை | தோப்பில் முஹம்மது மீரான் | நாவல்
நூல் 57 | அத்தினி | சித்ரா சிவன் | நாவல்
நூல் 58 | மின் தூக்கி | அபுல்கலாம் ஆசாத் | நாவல்
நூல் 59 | எதிர்சேவை | பரிவை சே குமார் | சிறுகதைத் தொகுப்பு
நூல் 60 | சாபம் | சல்மா | சிறுகதைத் தொகுப்பு
நூல் 61 | குற்றப் பரம்பரை | வேல ராமமூர்த்தி | நாவல்
நூல் 62 | ஈரவாதை | கா ரபீக்ராஜா | நாவல்
நூல் 63 | Master of the Game | Sidney Sheldon | Novel
நூல் 64 | தெய்வம் என்பதோர் | தொ. பரமசிவன்
நூல் 65 | வேற்று திசை | ஜெஸிலா பானு | சிறுகதைகள்
நூல் 66 | டைமண்ட் ராணி | ஆத்மார்த்தி | சிறுகதைகள்
நூல் 67 | காளையன் | பரிவை சே குமார் | நாவல்
நூல் 68 | தகர் | ‘தெரிசை’ சிவா | நாவல்
நூல் 69 | தாதி | ஆர். ஷஹினா | சிதம்பரம் ரவிச்சந்திரன் | சிறுகதைகள் | மலையாளம் – தமிழ் மொழியாக்கம்
நூல் 70 | அறிவியல் புனைகதைகள் | பேரா சோ மோகனா
நூல் 71 | பெண் ஏன் அடிமையானாள்? | தந்தை பெரியார் | கட்டுரை
நூல் 72 | ஒரு காதல் கதை | மீரான் மைதீன் | நாவல்
நூல் 73 | பாலைவன பரமபதம் | சிவசங்கரி வசந்த் | நாவல்
நூல் 74 | சர்மிஷ்டா | என். எஸ். மாதவன் | கே. வி. ஷைலஜா | சிறுகதைகள் | மொழியாக்கம் | மலையாளம் – தமிழ்
நூல் 75 | என்னைத் தேடி | நசீமா ரஸாக் | நாவல்
நூல் 76 | பூக்குழி | பெருமாள் முருகன் | நாவல்
நூல் 77 | எழுதாப் பயணம் | லக்ஷ்மி பாலகிருஷ்ணன் | கட்டுரை
நூல் 78 | அன்பு விரயங்கள் | பானுமதி கண்ணன் | நாவல்
நூல் 79 | ஆதிராவின் மொழி | சிவமணி | சிறுகதைகள்
நூல் 80 | பால்யம் | சல்மா | சிறுகதைகள்
நூல் 81 | இதுவே சனநாயகம் | தொ. பரமசிவன் | கட்டுரைகள்
நூல் 82 | அமெரிக்கக்காரி | அ. முத்துலிங்கம் | சிறுகதைகள்
நூல் 83| Sadako Sasaki and the thousand paper cranes |SUE DICICCO & Sadako’s brother MASAHIRO SASAKI
நூல் 84 | ஏழாம் உலகம் | ஜெயமோகன் | நாவல்
நூல் 85 | சஞ்சாரம் | எஸ். ராமகிருஷ்ணன் | நாவல்
நூல் 86 | பயராமனும் பாட்டில் பூதமும் | பாலகணேஷ் | நாவல்
நூல் 87 | அயல் சினிமா | எஸ். ராமகிருஷ்ணன் | கட்டுரைகள்
நூல் 88 | மனதுள் மனிதம் கண்விழிக்கும் தருணங்கள் | கார்த்திகா ராஜ்குமார் & திருச்சி சையது
நூல் 89 | வேரும் விழுதுகளும் | பரிவை சே குமார் | நாவல்
நூல் 90 | மிளிர்ந்தா | G. ஈஸ்வரி | நாவல்
நூல் 91 | சர்வம் ஸ்டாலின் மயம் | மருதன் | சுயசரிதை
நூல் 92 | புல் சிற்பம் | வசந்தா கோவிந்தராஜன் | நாவல்
நூல் 93 | மனிதனும் மர்மங்களும் | மதன்
நூல் 94 | வெம்பு கரி | ஜி. சிவக்குமார் | சிறுகதைகள்
நூல் 95 | பூவப் போல பெண்ணொருத்தி | ஆர். வி. சரவணன் | சிறுகதைகள்
நூல் 96 | இலக்கு | தசரதன் | நாவல்
நூல் 97 | OF MICE AND MEN | John Steinbeck | Novel
நூல் 98 | Alt + 2 | பினாத்தல் சுரேஷ் | சிறுகதைகள்
நூல் 99 | தொலைந்து போனவர்கள் | சா. கந்தசாமி | நாவல்
நூல் 100 | இரகசியம் | The Secret | Rhonda Byrne | PSV குமாரசாமி
சிறுகதைகள் மற்றும் புத்தகங்கள் குறித்துப் பேச ஆரம்பித்தபோது முதலில் எனது படைப்பையே பேசியிருந்தார். இப்போது ஆரம்பித்திருக்கும் நூறு கட்டுரைகள் தொடரிலும் எனது கட்டுரையைத்தான் முதலில் ஆரம்பித்திருக்கிறார். இப்படியான ஒரு வாய்ப்பு எனக்கு எழுத்துக்கு கிடைத்ததில் மிகுந்த சந்தோசம். என் எழுத்தை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லும் பாலாஜி அண்ணனுக்கு நன்றியும் அன்பும்.
நன்றி,
பரிவை சே. குமார்.
Add comment
You must be logged in to post a comment.