“திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்” * முன்னாள் ராணுவத்தினனான ஹெர்வே ஜான்கர் புதிய தொழிலான பட்டு வியாபாரத்துக்காக பிரான்சிலிருந்து உலகின் கடைசியான ஜப்பானுக்குப் போகிறான்.
களம் என்பது இங்கே வேறுவேறானதுதான். மாடுகளுக்கு ஜல்லிக்கட்டு. மனிதர்களுக்கு வாழ்க்கை. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் மிருகங்களும், மனிதர்களும் ஒரே நேர்கோட்டில் இணைந்து பயணிக்கிறார்கள். அது ஆதியிலேயே குருதியில் கலந்த பிறப்பின் குணம். சில...
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவீட்டிலும் கைவரிசை காட்டுபவர் பெருமாள்முருகன். இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு. சின்னக் குத்தல், கூரிய விமர்சனம், குழந்தைமையின் ஏக்கம், குழந்தை உலகம் பற்றிய வியப்பு, இயற்கை இழப்பு, இயற்கை மீதான பரிவு, சிறு பொழுதுகளில் முடிவடையும் காலம், அநாதி காலத்தின் நொடிப் பொழுதுகள், அரசியல் நக்கல், அரசியல் கரிசனம் என்று அனுபவங்களின் வெவ்வேறு நிலைகளை இந்தக் கவிதைகளில் முன்வைக்கிறார். அதுவும் கனவு கனியும் தருணங்களின் படிமங்களா.
மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான்...
ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப்பில் எடுத்துக்கொள்ளப்படாத ஒன்று. லாட்வியாவைப் பொருத்தவரை நாஸிகளோடு உடன்போன நாடு என்றே அது அறியப்படுகிறது. ஸான்ட்ரா கால்னியடேயின் ‘ஸைபீரியப் பனியில் நடனக்...
பித்தமும் எதிர்வயமான உயர்ந்த அறிவு நிலையும் அம்பலத்துடன் ஆறு நாட்கள் கதையின் உள் அந்தரங்கத்தில் ரகசியமாக ஏற்படுத்தும் உக்ர விவாதம் கதையின் மேல் அமைப்பில் பல்வேறு நிகழ்வுகளாகவும் பாத்திரங்களாகவும் கதை அமைப்புக்கொள்கின்றன. இது ஓர்...