Galaxy Books

நலம் வாழ : கட்டுரைத் தொடர் 4 : கேள்-கவனி

ஜெஸிலா பானு  நலமா?  நான் நலம்.  இப்படிக் கேட்கவும், சொல்லவும் எல்லோருக்குமே யாராவது ஒருவராவது தேவைப்படுகிறார்கள் அல்லவா? அதுகூட இல்லையெனும் போது வாழ்க்கையில் விரக்தி ஏற்படும் அல்லவா?  காதலன் பல கனவுகளுடன் தன் காதலியை மிகவும் ரம்யமான காதல் கசியும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிடித்த ஒரு பொருளை அவளுக்குப் பரிசளித்து, அவள் கண்ணைக் காதலுடன் பார்த்து ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லும்போது, அவள் அதைக் கவனியாமல் அந்தப் பரிசை அந்த இடத்தின் பின்னணியில் […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 3 – அக மகிழ்

ஜெஸிலா பானு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ”மகிழ்ச்சி எங்கிருந்து வருது தெரியுமா?” இதையே நீங்கள் வடிவேல் காமெடியில் வர ’இசை எங்கிருந்து வருது தெரியுமா?’ தொனியில் வாசித்துப் பாருங்கள் தன்னால் சிரிப்பு வரும். சிரித்தீர்களா? இந்தத் தருணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் அப்படிதானே? இப்போதுதானே புன்முறுவல் தந்தீர்கள், அப்போது அதை நான் மகிழ்ச்சி என்று எடுத்துக் கொள்ள முடியாதா? அதானே, உங்கள் மகிழ்ச்சிக்கு நான் எப்படி உத்திரவாதம் தர இயலும்? ஆனால் இந்தக் கட்டுரையை நான் எழுதி முடித்தால் […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 2 – மனம் தெளிநிலை 

ஜெஸிலா பானு அலுவலகத்திற்குச் செல்லும் முன் வேறொரு சந்திப்பை நிகழ்த்திவிட்டுச் செல்ல வேண்டும் என்று கிளம்பினேன், ஆனால் கடற்கரை குதிரை போல் என் வண்டி தன்னால் அலுவலகத்தை நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தது. நான் மட்டுமா இப்படியென்றால், இல்லை பெரும்பாலானவர்களும் இப்படிதான். என்ன? ’இல்லை’ என்கிறீர்களா? ஓர் அறைக்குச் சென்றுவிட்டு ‘இங்கு எதற்காக வந்தோம்’ என்று யோசித்திருக்கிறீர்களா இல்லையா? செல்பேசியை எடுத்துவிட்டு ‘யாரை அழைக்க இருந்தேன்’ என்றும் தடுமாறியிருப்பீர்கள். ஏன் இப்படி நிகழ்கிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா?  இளம் வயதில் […]

நலம் வாழ : கட்டுரைத் தொடர் 1

ஜெஸிலா பானு அலாவுதீனுக்கு அற்புத விளக்குக் கிடைத்தது போல் நமக்குக் கிடைத்தால் முதலில் நீங்கள் விளக்கைத் தேய்த்து என்ன கேட்பீர்கள்?  ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நம் அனைவரிடமும் விளக்கு இருக்கிறதோ இல்லையோ, கேட்டவுடன் நிறைவேற்றிவிடும் பூதம் உள்ளது. ஆனால் அதை நாம் பெரும்பாலான நேரத்தில் சரியாகப் பயன்படுத்துவதில்லை.  நான் பூதம் என்று சொல்வது உங்களுடைய மனவோட்டத்தை, சிந்தனையை, நேர்மறையான எண்ணத்தின் ஆற்றலைப் பற்றிதான்.  ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது ஒருவிதமான காரை நீங்கள் வாங்கவேண்டும் என்று ஆழமாக […]

Shopping cart close