Galaxy Books

இளைய பாரதத்தினாய்…

மோகன் ஜி மும்பையில் சௌபாத்தி கடற்கரை… பிரதான சாலையின் நடைபாதைக்கு வரப்பு கட்டியதுபோல் ஒன்றரையடி சுற்றுச்சுவர். சாலைக்கு முதுகுகாட்டி சுவரின்மேல் அமர்ந்திருக்கிறேன். பலநேரம் இந்தச்சுவரில் முட்டிக் கொண்டுதான் என் கவிதைகள் கண்விழிக்கின்றன. எதிரே நீண்ட மணல்வெளி. அதைத் தாண்டி வெள்ளலை சரிகையிட்ட நீலக்கடல். அதைத் தாண்டியும் விரியும் மனவெளி. இன்று கவிதை எழுதும் மனநிலை மூட்டம் போட்டிருந்தது. ஒழுகிச் செல்லும் சுகமான பேனா என்னிலிருந்து வரிகளைப் பிரித்து தாளில் ஒற்றியபடி…. அருகே நீலப்பதாகை விரிப்பு போல் பார்வையின் […]

நினைவுகள் : புகைபடிந்த அடுப்படி

அபு பர்ஹானா கேஸ் அடுப்புகள் பரவலாக உபயோகத்திற்கு வருவதற்கு முன் விறகு அடுப்புகளும் (கட்டடுப்பு) மண்ணெண்ணெய் அடுப்புகளும் தான் புழக்கத்தில் இருந்தன. மண்ணெண்ணெய் அடுப்புகளிலேயே திரி அடுப்பு , பர்னர் அடுப்பு (ஏர் அடிக்கும் அடுப்பு ) என இரண்டு வகைகள் இருந்தது. விறகு மற்றும் மண்ணெண்ணெய் குறித்த நினைவுகள் இன்னும் நினைவில் அப்படியேயிருக்கிறது. ஏர் அடுப்பில் தீயை வேகப்படுத்த பம்ப்படித்ததும் , நடுவில் பின்னை வைத்துக் குத்தியதும் அழகிய காட்சியாகப் பதிந்திருக்கிறது. ஒன்னாம் நம்பர், ரெண்டாம் […]

சிறுகதை : செல்லாத்தி

தசரதன் மார்கழியில் கோவிலுக்கு போவதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. இன்று கோவிலுக்கு போகலாமென்று யோசிப்பதற்கும் அருகே உள்ள கோவிலிலிருந்து ஒரு பக்தி பாடல் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. அதுவே ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியாக தோன்றியது. பீரோவை திறந்து எந்த புடவையை கட்டலாமென தேடியதில் பழைய புடவை ஒன்று அடுக்கிலிருந்து பிதுங்கி காலில் விழுந்தது. கல்யாணம் வரைக்கும் எனக்கு புடவை கட்ட தெரியாது. இப்பவும் சரியாக கட்ட வராது என்பது வேறு கதை. கல்யாணமாகி கொஞ்ச காலம் சுடிதாரிலே […]

நினைவுகள் : கனகாம்பரம்

சுடர்விழி சேதுபதி ராஜா முன்பெல்லாம் கனகாம்பரமும் மல்லிகையோடு சேர்ந்த ஒரு அங்கமாக இருக்கும். எல்லா நற்காரியங்களுக்கும் கனகாம்பரம், மல்லிகை பூ என்று சேர்த்துதான் வாங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அலங்காரம் என்ற பெயரில் புடவைக்கு ஏற்ற நிறத்தில் பூக்களும் வடிவமைப்பு செய்யப்படுவதால் கனகாம்பரத்தின் பங்கை இல்லாமல் செய்து விட்டது. இன்னொரு விஷயம் கனகாம்பரப்பூ வைத்தவர்கள் பட்டிக்காட்டு ஆட்கள் என்ற நகரத்தாரின் எண்ணமும் கூட இந்த மலரை கல்லூரி மாணவிகள் சூட்டிக் கொள்ள மறுப்பதற்கு காரணமாகும். நான் பள்ளியில் படித்த […]

கிராமத்துக் கல்யாணம்

பரிவை சே.குமார் 2000-க்குப் பின் கிராமத்துத் திருமணங்கள் மெல்ல மெல்ல திருமண மண்டபங்களைத் தேடி நகரத்துக்கு வர ஆரம்பித்து இப்போது கிராமங்களில் நடந்த திருமண முறையும், மகிழ்வும் எப்படியிருக்கும் என்பதே தெரியாமல் போய்விட்டது. மண்டபத் திருமணம் என்பது முதல் நாள் மூன்று மணிக்கு எல்லாப் பொருட்களையும் ஏற்றி வந்து திருமணம் முடிந்த அன்று மதியம் மூன்று மணிக்கு மண்டபத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும் என்ற விதிக்கு உட்பட்டது. அந்த இரண்டு நாட்களும் பரபரப்பாக வேலை நடக்கும். […]

சுடும் நிஜம்

வெங்கட் நாகராஜ் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு நாற்பத்தியிரண்டு வயது வரை திருமணம் நடக்கவில்லை. நீண்ட காலமாக அவருக்கு ஒரு வரன் அமையாததற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இந்த வயதில் கல்யாணம் இனிமேலும் அவசியம் தானா என்ற எண்ணமும் அவருக்கு வலுவாக இருந்தது. இப்படியே இருந்துவிட்டு போலாமே என்று நினைத்துக் கொண்டிருந்த போதுதான் ஒரு முறை தமிழகம் வந்தபோது தானாக வந்த ஒரு பெண்ணின் சம்பந்தம் அவருக்குப் பிடித்துப்போனது. ஜானகி என்ற அந்த பெண் மிகுந்த திறமைசாலி. […]

புத்தகப் பார்வை : ALT + 2

பரிவை சே.குமார் கேலக்ஸி இணயதளத்தின் வழி வாங்க : ALT + 2 **** ALT + 2 பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதும் சுரேஷ் பாபு அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இது. இதில் மொத்தம் 25 கதைகள் இருக்கின்றன. சின்னச் சின்ன கதைகளாய் இருந்தாலும் மிகச் சிறப்பான முடிவோடு, குறிப்பாக எதிர் பார்க்காத முடிவோடு இருக்கின்றன. இதில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பாணியில் இருக்கின்றன. குடும்ப, சமூக. அறிவியல், வரலாறு என எல்லாப் […]

சிறுகதை : அம்மா காத்திருக்கிறாள்

கீதா இவர் தில்லையகத்து க்ரோனிக்கல் என்னும் வலைப்பூவில் தனது நண்பர் துளசி அவர்களுடன் இணைந்து பத்தாண்டுக்கும் மேலாக எழுதி வருகிறார். நிறைய எழுதுவார். இவரது கதைகள் எங்கள் பிளாக் தளத்தில் பகிரப்பட்டு பலரால் பாராட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு கதைதான் இங்கே உங்கள் வாசிப்பிற்காக. ***** என்றும் வரும் அம்மாவை ஏன் இன்று காணவில்லை? அம்மாவுடன் பேசவில்லை என்றால் அன்றைய தினம் ஏனோ, ஏதோ ஒரு மாதிரி இருப்பது போல் தோன்றும் எனக்கு. அம்மாவுடன் பேசினால் நேர்மறையான அறிவுரைகள், […]

புத்தகப் பார்வை : மதுரை நடுகற்கள்

அழகு ராஜா மதுரை நகர் உள்ளேயும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் நாம் நிறைய நடுகற்களைக் காண முடியும். சில இடங்களில் குலசாமிக்குச் சமமாக நடுகற்களை வணங்கி வருகிறார்கள், ஆனால் சில இடங்களிலோ கேட்பாரற்று குப்பைக்குள்ளும், மண்டிக்கிடக்கும் புதர்களுக்குள்ளும் நடுகற்களைப் பார்த்து உள்ளேன். நடுகல் என்றால் என்ன..? இதன் வரலாறு என்ன..? அப்படின்னு ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு யோசனை ஓடிக்கிட்டே இருந்துச்சு. இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ‘அரவான்’ படத்தின் மூலம் அதை ஓரளவுக்கு என்னால் தெரிந்து […]

Shopping cart close