Galaxy Books

புத்தகப் பார்வை : சாண்டில்யனின் ‘யவனராணி’

பரிவை சே.குமார் யவனராணி…  சாண்டில்யன் அவர்களின் வரலாற்றுப் புதினத்துக்கே உரிய இலக்கணத்தை மீறாமல் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் விரும்பும் கதைநாயகனைச் சுற்றி நகரும் களம்தான் யவனராணி. திருமாவளவன்… இந்தப் பேரைக் கேட்டதும் இவரு எதுக்கு இங்க வர்றாருன்னு நினைக்காதீங்க. இது வரலாற்றில் மிகப்பெரிய அரசனாக இருந்து நமக்கு காவிரியில் கல்லணை கட்டிக் கொடுத்த சோழப்பேரரசன் கரிகாலனுங்க. கரிகாலனின் தாய் தந்தையை தூங்கும் போது மாளிகையை எரித்துக் கொன்று விட்டு ஆட்சியைப் பிடிக்கிறான் இருங்கோவேள் என்பவன். இளவரசனான திருமாவளவன் […]

புத்தகப் பார்வை : நான்காம் சுவர்

ராஜாராம் மூன்று வருடங்களுக்கு முன் ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு கடைசி தினத்திற்கு முந்தைய தினம் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பெரும்பாலான புத்தகங்கள் விற்றுப் போய் விட்டன. மிகப்பெரிய அளவில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சியில் பெரிய அரண்மனைக்கு ஒற்றைச் சாளரம் போல….தமிழுக்கென ஒரே ஒரு கடை மட்டும். ‘கல் தோன்றா…’ எனப் பெருமைப்படும் மொழிக்கு அதுவாவது கிடைத்ததே எனச் சந்தோசப்பட்டுக் கொண்டேன். யாவரும் பதிப்பகத் தோழர் ஜீவகரிகாலன் அவர்கள் “நான்காம் சுவர்” புத்தகத்தை கொடுத்து ‘இதப்படிங்க…’என்றார். அதன்பிறகு பத்து […]

புத்தகப் பார்வை : தொ.ப-வின் ‘அழகர் கோவில்’

பரிவை சே.குமார். அழகர் கோவில்- எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்கள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொண்ட ஆய்வு நூலாகும். நமக்கெல்லாம் அழகர் கோவில் மதுரையில் இருக்கிறது என்பதும் வைகை ஆற்றில் இறங்கும் மிகப்பெரும் திருவிழாவும் மட்டுமே தெரியும், சிலருக்கு இன்னும் கூடுதலாகச் சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். இது நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்து BYNGE புண்ணியத்தில் வாசித்த புத்தகம் இது. வாசிக்க வாசிக்க அழகர் கோவில் குறித்தான பல அறியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்ததும் எழுத்தாளரின் கள […]

புத்தகப்பார்வை : ஓநாய் குலச்சின்னம்

ஆசிரியர் : ஜியாங்க் ரோங் , தமிழில் : ஜி.மோகன் எழுதியவர் : எழுத்தாளர் பால்கரசு சசிகுமார், அபுதாபி சீன மொழியில் எழுதப்பட்டு, பிரபலமான ‘wolf totem’ என்ற நாவலை திரு. சி.மோகன் அவர்கள் ‘ஓநாய் குலசின்னம்’ என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்நாவல் மங்கோலிய மேய்ச்சல் நில மக்களின் பின்னணிக் கதைகள் மற்றும் சீன விளைச்சல் நில மக்களால் சுற்றுப்புற சூழல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் மிக விரிவாகப் பேசுகிறது. மங்கோலிய மக்களின் […]

புத்தகப் பார்வை : மரப்பாலம்

கரன் கார்க்கி மரப்பாலம்… இன்றைய நிலையில் அதிகமாகப் பணத்தைச் சுருட்டாமல் கட்டுகின்ற சிமெண்ட் பாலங்கள் கூட சில வருடங்களிலேயே பல்லைக் காட்ட ஆரம்பித்து விடுகின்றன. அப்படியிருக்கும் போது மரப்பாலம்..? அதுவும் மழை வெள்ளம் நிறைந்து ஓடும் ஆற்றின் குறுக்கே கட்டும் மரப்பாலம்…? பல உயிர்களைக் காவு வாங்கி… காவு வாங்கி… மீண்டும் மீண்டும் உயிர்தெழும் மரப்பாலம் முழுமையாக கட்டப்பட்டதா..? ஜப்பானியர்கள் நினைத்தபடி அதில் இரயில் பயணத்தைத் தொடர்ந்தார்களா…? அடிமைப்படுத்தி வைக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கு உடைந்ததா…? என்பதையெல்லாம் […]

புத்தகப் பார்வை : சோளகர்தொட்டி

‘நான் பிணம்’ ‘நீயும் கூடத்தான் மாதேஸ்வரா…’ இந்த புத்தகத்தை வாங்க : https://galaxybs.com/shop/essay-and-articles/literature/solagar-thotti/ இந்த இரண்டு வரிகளும் போலீஸ் மிருகங்களின் காமப்பசிக்கு இரையான மாதியின் மனசுக்குள் வெடித்துப் பிறந்து இன்னும் என் மனசுக்குள் சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. சோளகர் தொட்டி மக்களின் வாழ்க்கையில் இருந்து வெளிவர முடியாமல் தடுமாறும் மனசுக்குள் இந்த வரிகள் அடிக்கடி மேலெழுந்து தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. அந்தத் தாக்கத்தில் தனித்து நிற்கிறேன்… வேறேன்ன செய்ய..? படிக்கும் காலத்தில் டீக்கடை தினத்தந்தியில் எப்படியும் ஒரு […]

மின்தூக்கி: மதிப்புரை (பிலால் அலியார்)

மின்தூக்கி …. தலைப்பை போன்றே கதையின் நாயகனை மட்டும் மேலே தூக்கிச் செல்லாமல், படிக்கின்ற அனைவருக்கும் முன்னேற்றத்திற்கான வாழ்விற்கு, நம்பிக்கையுடன் உயரே சென்று விடலாம் என உத்வேகத்தை வழங்கும் தன்னம்பிக்கைக்கான உதாரண நூல். சுய முன்னேற்ற நூல்களில் இருக்கும் பிரச்சனையே அந்த நூல்களில் இருக்கும் தீர்வுகள் நமக்கு அந்நியப்பட்டு இருப்பதே. மின்தூக்கியில் படித்து முடித்த ஒவ்வொரு இளைஞனுக்குமான வாழ்வியல் செய்தியும், பாடமும் மனதிற்கு நெருக்கமாக, அதை அடையக்கூடியதாக உணர வைக்கப்படுகிறது. 80களின் இறுதியில் பட்டயப் படிப்பு (Diploma) […]

Shopping cart close