வாழ்க்கைக்கு போதாது – களந்தை. பீர் முஹம்மது
புத்தகங்களைப் பிடிக்கும் கைகள் நறுமணம் மிக்கவை! புத்தகங்களை வாசிக்கும் கண்கள் ஒளிமிக்கவை! புத்தகங்களை உள்வாங்கும் இதயம் கனிகளின் தோட்டம்! நம் அறிவின் சுடரை ஏற்றுவன இந்தப் புத்தகங்களே! நாம் வாழுகின்ற இந்த ஒரேயொரு வாழ்க்கை நமக்குப் போதுமானதன்று.வாழ்க்கை சோலையாகவும் பெருங்கடலாகவும் விரிந்திருக்கின்றது. அவ்வாழ்வைப் பன்முகமாக வாழவும், நீந்திக் கடக்கவுமான வழிகாட்டிகள் நம் கையில் தவழப் போகும் நூற்களே! -களந்தை.பீர் முஹம்மது