Galaxy Books

பெண்ணையாறு முதல் பம்பா வரை

மோகன் ஜி சிறுபிராயத்தில் கடலூரில் வசித்த நாட்களில் தென்பெண்ணையாறு தான் எங்களுக்கு தேம்ஸ், ரைய்ன், கங்கை, கோதாவரி எல்லாமே. அந்த நாட்களில் பெண்ணையாற்று நீரும் சுத்தமாகவே இருக்கும். வீட்டுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அங்கு குளிப்பதுண்டு. அதன் கரையிலே தான் குடும்ப மூத்தோர்கள் சரீரம் நீத்ததும், நான் அதன் நீரில் முங்கி நினைப்பொழிக்க முயன்றதுவும்.. நினைவுகளும் நதியில் முங்கிய மாத்திரத்தில் கரைந்து விடுமா என்ன? பின்னர், பெண்ணையாற்றைக் கடந்து போவதும் வருவதுமாய் காலம் போயிற்று. கடக்கும் தோறும் அந்த […]

குறுந்தொடர் : நீலி

பகுதி – 3 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முந்தைய அத்தியாயங்களை வாசிக்க… பகுதி-1 பகுதி-2 ****** எவ்வளவு வளர்ந்துவிட்டாலும், வயதாகிவிட்டாலும் நண்பர்களின் அரவணைப்பைப் பெறும்போது போதும் ஒரு பச்சிளம் குழந்தையாகி விடுகிறோம். நமக்கானதை அறிந்து, புரிந்து, தெரிந்து கேட்காமலே செய்து தந்துவிடுவதில் நண்பர்கள் இன்னொரு தாய் தந்தைக்கு ஒப்பானவர்கள். நாம் எப்படி அவர்களைப் பார்க்கிறோமோ அப்படி அவர்களும் நம்மைப் பார்ப்பது இயற்கையின் சூட்சமம். அந்த ரகசியத்தை அறிந்தும் அறியாமலும் ஒரு வழிப்போக்கன் […]

தொடர்கதை : பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-3 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 மதன் பதட்டமாய் காரின் பின் பக்கத்தில் வந்து நோட்டமிட்டான். விக்கி யார் செய்திருப்பார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். தென்னை மரங்களுக்கு இடையே அழுக்கு வேட்டியும் தாடியுமாய் ஒருவன் ஓடிக் கொண்டிருந்ததைக் கவனித்து ‘ஏய்…’ என்று அவன் குரல் எழுப்பும் போது தான் மூர்த்தியும் கவனித்து குரல் எழுப்பி கொண்டே ஓடவும் செய்தார். “ஓடறான் பாரு பிடி” செக்யூரிட்டி விக்கி கை காட்டிய திக்கில், ஓடிக் கொண்டிருந்தவனை […]

குறுந்தொடர் :நீலி

பகுதி – 2 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முதல் பகுதி வாசிக்க… பகுதி-1 **** “அங்கயா வேல? இந்த பக்கம் பாரு..!” குமார் காட்டிய இடத்தில் நீலி பெக்கேஜ்ட் டிரிங்கிங் வாட்டர் என்ற விளம்பரம் தாங்கிய காலெண்டர் ஒன்றுத் தொங்கி கொண்டிருந்தது. நீலி என்று அச்சிடப்பட்டிருந்த லோகோவேப் பார்ப்பதற்கு வித்தியாசமாகயிருந்தது. இன்டர்வியூவிற்குச் சென்றிருந்தபோது கூட அதையேதான்  அவ்வப்போது நோக்கிக் கொண்டிருந்தேன். நீலி என்ற எழுத்துகளை உன்னிப்பாக கவனித்தேன். இரண்டே இரண்டு எழுத்துக்கள் […]

சிறுவர் கதை : தோரணமும், மாக்கோலமும்

கமலா முரளி மலையடிவாரத்தில் அமைந்திருந்தது மாத்தூர் கிராமம். தோப்புகளும் நெல்வயல்களும் அழகுக்கு அழகு சேர்க்கும் .அது அறுவடைக் காலம். மக்கள் சுறுசுறுப்புடன் நெற்பயிரைக் களத்தில் சேர்த்துக் கொண்டு இருந்தனர். பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால், வீடுகளும் புதுக்கோலம் பெறத் துவங்கி இருந்தது. மன்னர் வீரகேசரிக்கு இதே தைப் பண்டிகை நாளில் தான் பட்டாபிஷேகம் நடந்தது.அதனையும் சிறப்பாக கொண்டாடுவர் மக்கள். ஆட்டனத்தி, வீட்டில் எல்லா இடங்களையும் தூய்மைப் படுத்தி இருந்தாள். தேவையற்ற, கிழிந்த பொருட்களைப் பிரித்து வைத்தாள். அவள் […]

குறுந்தொடர் : நீலி

பகுதி – 1 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியைச் சேர்ந்த எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப். நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டாதாரி ஆவார். இரண்டாண்டுகள் இந்தியாவில் பணி செய்தவர், அதன்பின் கடந்த பதினைந்து வருடங்களாக அமீரகத்தில் பணி செய்து வருகிறார். ஓவியம் தீட்டுவதிலும் இசையிலும், கவிதை,கதைகள் எழுதுவதிலும் அதீத ஆர்வம் கொண்டவர். இவரது முதல் குறுநாவலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ இன்னும் சில தினங்களில் கோதை பதிப்பகம் மூலம் வெளிவரயிருக்கிறது. […]

தொடர்கதை : பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-2 ஆர்.வி.சரவணன் முதல் அத்தியாயம் வாசிக்க : https://galaxybs.com/rvs_novel02_part_1/ மதனும் விக்கியும்  காரை விட்டு அவசரமாக இறங்கி டூ வீலரை நோக்கி வந்தார்கள். கோபத்துடன் அவர்களை நோக்கி வேகமாய் ஓடி வந்த பிரியா என்றழைக்கப்பட்ட அந்த பெண்  மதனை அருகில் பார்த்ததும் தயங்கி அப்படியே நின்று விட்டாள். அவளது முகத்தில் இருந்த கோபத்தை நொடிப்பொழுதில் எங்கே எப்படி மறைத்தாள் என்பதை அவளிடம் தான் கேட்க வேண்டும். மதனையும் விக்கியையும் பார்ப்பதை தவிர்த்தவள் விழுந்து கிடந்த தன் டூவீலரின் அருகே […]

சிறுகதை : இட்லி

பரிவை சே.குமார் இட்லியை நன்றாக உடைத்து விட்டு அதன் மீது பெருங்காயம் மணக்கும் சாம்பாரை ஊற்றி பிசைந்து சாப்பிடுவதில்தான் அதன் சுவையே இருக்கிறது என்பது செந்திலின் எண்ணம்.  அவன் பிறந்த மண்ணும் அப்படித்தான் அவனுக்கு சாப்பிடக் கற்றுக் கொடுத்திருந்தது.  அவன் அம்மா ஆட்டுக்கல்லில் ஆட்டும் மாவு இட்லியாகும் போது அவ்வளவு மென்மையாக இருக்கும். இட்லிக்கு சட்னி என்பதைவிட அவனுக்கு முருங்கைக் காயும் கத்திரிக்காயும் உருளைக்கிழங்கும் போட்டு வைக்கும் இட்லி சாம்பாரின் மீதே அதீத விருப்பம். சாம்பார் என்றால் […]

கேலக்ஸி – அல் குத்ரா ஒன்று கூடுகை

சில நிகழ்வுகள் மனசுக்கு நெருக்கமாகவும், மகிழ்வாகவும் அமையும். அப்படியானதொரு நிகழ்வு சென்ற வருடத்தின் இறுதிச் சனிக்கிழமை (30/12/2023) மாலை அல் குத்ரா ஏரியில் நிகழ்ந்தது. ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்ட ஒன்று கூடல் நிகழ்வு அது. நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்து, மகிழ்வான, மனசுக்கு நெருக்கமான விழாவாக நடத்தி முடித்த பாலாஜி அண்ணன், சகோதரர் பிலால் அலியார், ஜெசிலா மேடம் ஆகியோருக்கு முதலில் நன்றி. அல் குத்ரா ஏரிக்குப் போவதற்குப் பாதைகள் சரியில்லாததாலும் ஏதாவது ஒரு இடத்தில் போய் […]

 சிறுகதை : இந்த மண்ணின் தேவதைகள்

சுஶ்ரீ நான் யார் தெரியுமா, தெரியாதா. சரி சொல்றேன். எங்க ஊர் மதுரை. என் பேர் தெரியுமா, அதுவும் தெரியாதா. என் பேர் ஆர்.பத்மஜா.ஆமாம் பெரிய கிளியோபாட்ரானு முனகாதீர்கள், பொறுமையா நான் சொல்றதை கேளுங்க.முழுசா சொல்லவா சுருக்கிச் சொல்லவா?முழுசாவே சொல்றேன் உலகத்துல பொண்ணுங்கன்னா என்ன கஷ்டம்னு அப்பதான் புரியும். பிடிக்கலைனா நாலு திட்டு திட்டிட்டு பாதில கழண்டுக்கங்க, சரியா?              நான் பிறக்கறப்ப அம்மாவோட அம்மா,பாட்டிதான் வீட்லயே பிரசவம் பாத்தாங்களாம். பாட்டி எப்பவும் சொல்வாளாம் பொண்ணா பிறக்கறதுக்கு […]

Shopping cart close