Galaxy Books

பொல்லாத மழைபெய்ய…

மோகன் ஜி சபரிமலையின் பெருவழி நடக்கையிலே பெருமழை பெய்தால், நடப்பதும் ஏறுவதும் மிகவும் கடினமாகி விடும். கெட்டிப்பட்டுப்போன பாதை இளகி வழுக்கும். பிடிமானம் இருக்காது. நாம் எவ்வளவு கவனமாக அடியெடுத்து வைத்தாலும், பக்கலிலோ முன்போ செல்பவர் வழுக்கிச் சரிந்தால், நாமும் நிலைதடுமாற வேண்டியது தான். 1976அல்லது 1977ஆம் வருடம்… அழுதை மலை ஏற்றத்தின்போது அடைமழை. அருவிபோல் பாதையில் மழைநீர் இறங்குகிறது. ஏறிச் செல்லும் ஐயப்பமார் வழுக்கலில் நிலைதடுமாறி அடுக்கிய சீட்டுக்கட்டு போல் சரிகிறார்கள். நானும் என் வயதொத்த […]

சிறுகதை : இன்க்ரிமெண்ட்

ஆர்.வி.சரவணன். சக்க போடு போடு ராஜா பாடலில் சிவாஜி தன் மனசாட்சியோடு மல்லுக்கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா. நம் சுந்தரமூர்த்தியின் நிலையும் அது போல் தான். அவனை கிண்டலடித்து கவுண்ட்டர் கொடுக்க வேறு மனிதர் யாரும் தேவையில்லை. அவன் மனசாட்சியே போதும். இதோ, மானேஜர் உன்னை கூப்பிடுகிறார் என்று கிளார்க் பாலு வந்து சொன்னது தான் தாமதம் ‘போடா போய் கை கட்டி வாய் பொத்தி நில்லு’ கேலி பேசியது மூர்த்தியின் மனசாட்சி. “நீ கொஞ்சம் வாயை மூடு” அதட்டிய […]

சிறுவர் கதை : யார் பெரியவன்..?

நத்தம் எஸ்.சுரேஷ்பாபு ஆதியூரில் இரண்டு புலவர்கள் வசித்துவந்தனர். ஒருவர் வேலப்பகவி, மற்றவர் சந்திரகவி. இருவரிடமும் போட்டியும் பொறாமையும் குடிகொண்டிருந்தது. புலவர்களிடம் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கலாமா? கூடாதல்லவா? இது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டுக் கொள்வர். ஒருநாள் வேலப்பர் வெளியில் கிளம்பினார். அதை அறிந்த சந்திரரும் ‘வேலப்பன் எங்கோ செல்கிறானே எதற்காகவோ..?’ என்று அவரை பின் தொடர்ந்தார். சந்திரகவி தன்னை பின் தொடர்வதை அறிந்த வேலப்பரும் நடையை விரைவாக்கினார். ஆனாலும் சந்திரகவி விடுவதாய் இல்லை. […]

படித்ததில் பிடித்தது : இரயில் நிலையத்தில் பணி செய்த பபூன் குரங்கு

உலக வரலாற்றிலேயே 9 ஆண்டுகள் ரயில் நிலையத்தில் வேலை செய்து சம்பளம் வாங்கிய முதல் பபூன் குரங்கு. 1800-களின் இறுதியில் தென் அமெரிக்காவின் கேப்டவுன் நகர ‘UITENHAGE’ என்கிற ரயில் நிலையத்தில் பாதுகாவலராக இருந்தவர் ஜேம்ஸ் வைட். இவருக்கு ஜம்பர் என்கிற இன்னொரு பெயரும் இருந்தது. ஓடுகிற ரெயிலில் இருந்து அடிக்கடி எகிறிக் குதித்து சாகசங்கள் செய்வதால் அவருக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. சில நேரங்களில் ஓடுகிற ரயிலில் இருந்து இன்னொரு ரயிலுக்குக் கூட பாய்ந்திருக்கிறார். அதுவே […]

கேலக்ஸி முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி- 2023 முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம், கேலக்ஸியின் முதலாமாண்டு சிறுகதைப் போட்டியின் முடிவுகளை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் எதிர்பார்ப்பைக் கடந்து வந்து குவிந்த கதைகளில் 212 கதைகள் முதல் சுற்றுக்குத் தேர்வாகின. அதிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் 92 கதைகள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகின. அதன்பின் 25 கதைகள் மூன்றாம் சுற்றுக்குத் தேர்வாகின. நிறைவுச் சுற்றுக்கு 18 கதைகள் என்றிருந்த நிலையில், எல்லாக் கதைகளும் போட்டி போட்டுக் கொண்டு மதிப்பீட்டில் முன்னும் பின்னுமாய் நிற்க, 25 கதைகளையும் முதன்மை […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 16 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் மதுரையில் அவரது வாரிசுகள் வரை விசாரித்து இவளா… இவனா… அவனா… என மாற்றி மாற்றி சந்தேகித்து கொலையாளி டாக்டர் சிவராமந்தான் என முடிவுக்கு வந்து அவரை வரவைத்துக் கேட்க, உண்மையைச் […]

குந்தவையின் சபதம்

கரந்தை ஜெயக்குமார் குந்தவையின் சபதம் புரியும்படி சொல்கிறேன், அருமை மன்னா, கேள். உலகு போற்றும் இரண்டாம் பராந்தகச் சோழனின் கொள்ளுப் பேரனும், என் அருமைத் தம்பி சிவபாத சேகரன் விருதுபெற்ற, அருண்மொழி வர்மனின் பேரனும், முடி கொண்ட சோழனாகிய, உன் தலை புதல்வனைக் கடத்தியவனும், அன்பு குமாரத்திகளைக் கடத்தத் திட்டமிட்டவனும், என்னை திருவாணைக்கா ஆலயத்தில் நுழைந்து, கொலை செய்ய முயற்சித்தவனுமாகிய, அந்த எம்பெருமானின் பக்தனாக வஞ்சக வேடமிட்டவனை, அந்த கபடதாரியை, நான் பார்க்க வேண்டும். அவனுக்கு என் […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 15 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் மதுரையில் அவரது வாரிசுகள் வரை விசாரித்து இவளா… இவனா… அவனா… என மாற்றி மாற்றி சந்தேகித்து கொலையாளி டாக்டர் சிவராமந்தான் என முடிவுக்கு வந்து கேசை முடிக்கும் விதமாக சிவராமனிடம் […]

சிறுகதை : பகையும் நட்பும்

கமலா முரளி ராஜூ புரண்டு படுத்தான். ‘அம்மா, தலை வலிக்குதும்மா’ என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் படுத்திருந்த அம்மாவை நெருங்கிக் கட்டிக் கொண்டான். கட்டில் தலைமாட்டில் இருந்து, துளசி தைலத்தை எடுத்து, அவன் தலையில் தடவி, முடியைக் கோதி விட்டு, “சரியாப் போயிடும்” என்றாள் அஞ்சுகம். வலியின் காரணமாக முனங்கிக் கொண்டே படுத்திருந்தான் ராஜூ. ராஜூவின் அப்பா திருப்பூரில், தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்தார். மாதாமாதம் முதல் வாரத்தில் அவர் அனுப்பும் பணம், வீட்டுச் செலவுகளுக்கே […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 14 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் மதுரையில் அவரது வாரிசுகள் வரை விசாரித்து இவளா… இவனா… அவனா… என மாற்றி மாற்றி சந்தேகித்து கொலையாளி டாக்டர் சிவராமந்தான் என முடிவுக்கு வந்து கேசை முடிக்கும் விதமாக வருண் […]

Shopping cart close