Galaxy Books

தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 10 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9 அழகாக விடிந்தது அந்த ஞாயிற்றுக் கிழமை. மாலை நாலரை மணிக்காக இரு இள இதயங்கள் ஆசையோடு காத்திருந்தன. ஒன்று அஷோக்கினுடையது. இன்னொன்று சுப்ரியாவினுடையது. இனிதாக வந்து சேர்ந்தது மாலை. கடற்கரைப் பிரதேசம் அதற்கே உரிய பிரத்யேக வசீகரத்துடன் கிடந்தது. அலைகள் கரையை ஊடியும் கூடியும் காதலித்துக் கொண்டிருந்தன. “தாங்க் யூ சுப்ரியா.” மௌனம் கலைத்தான் அஷோக். “எதுக்கு?” “என்னை மீட் பண்ண, […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 35 வெடி வெடித்த அதிர்ச்சியில் அங்கிருந்தவர்கள் யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எந்தப்பக்கம் ஓடினால் பிழைக்கலாம், இன்னும் அடுத்தடுத்த வெடி வெடிக்குமா, எதாவது அடிபட்டிருக்கிறதா,  நாம் உயிரோடுதான் இருக்கிறோமா எதுவும் புரியாமல் யோசிக்க நேரமில்லாமல் எல்லாப்பக்கமும் ஓடிக்கொண்டிருந்தார்கள். நுழைவாயில்கள் அனைத்தும் தானாக மூடிக்கொண்டிருக்க கதவை உடைத்துக்கொண்டிருந்த கூட்டம், அவர்களைக் கட்டுப்படுத்துவதா, தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதா என்று புரியாமல் அவர்களை அரைமனதாகத் தடுத்துக்கொண்டிருந்த காவலர்கள், உடைந்த மேடையின் இடிபாடுகளுக்கு இடையே ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்த ஆட்கள், திடீரென்று […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 34 பிரஜாபதி சிரித்துக்கொண்டே அனந்தனைப் பார்க்கத் திரும்பினார். “கடவுள். அந்தக் கருத்தாக்கத்தை ஒழிக்க எவ்வளவு பாடுபட்டோம் தெரியுமா?” அனந்தன்,”பல கடவுள்களை அழித்து, அந்தக்கடவுளாகவே பாரத் ஆகிவிட்டார். வாழ்க பாரத்.”மரணம் நிச்சயம் என்னும் சூழலிலும் அவர் மகிழ்ச்சி விநோதமாக இருந்தது. பிரவீண்,”அந்தக் கடவுளாக என்னையே ஆக்கிவிட்டார். வாழ்க பாரத்.” பிரஜாபதி கவனிக்காமல், “ஆக்குவதும் அழிப்பதும் கடவுள் வேலை என்றால் இன்று அந்த வேலையைச் செய்வது நாங்கள்தான். எங்களுக்குத் தேவை என்றால் கடவுளைக் கும்பிடவைப்போம், கலவரங்கள் நிகழ்த்தவைப்போம். அதே […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 33 பாவ்னாவும் ரிச்சர்டும் மாநாட்டு அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்பது மணி சந்திப்புக்கு எட்டரைக்கே வந்துவிட்டிருந்தாலும் யாரும் அந்த அறைக்கு வரவில்லை. யாரும் வரப்போகும் அறிகுறியும் தெரிந்திராவிட்டாலும் தயார் நிலையில் அமர்ந்திருந்தார்கள். ரிச்சர்ட்  அறிக்கையில் எழுத்துப் பிழை பார்த்துக்கொண்டிருந்தார். பாவ்னாவின் வேலையில் அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது என்று தெரிந்திருந்ததுதான்.  இருந்தாலும் பொழுது போகவில்லை. பிரஜாபதி மட்டும் ஒன்பது ஐந்துக்கு உள்ளே நுழைந்தார். “மூன்று நாட்கள் முன்பே தந்திருக்கவேண்டிய அறிக்கை. […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 32 பிரஜாபதி நீதிமன்ற அறையின் பின்பக்கமாக உட்கார்ந்திருந்தார். சடகோபனும் டைசனும் குற்றவாளிக்கூண்டில் நின்றிருந்தார்கள். இரண்டு காவலாளிகள் மட்டும் கொஞ்சம் பின்பக்கம் நின்றிருக்க மற்றபடி நீதிமன்றம் காலியாகத்தான் இருந்தது. சக்சேனா நீதிபதி இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்தார். ”சடகோபன், எம் ஃபில் பி எச் டி. இவ்வளவு படித்திருக்கிறீர்கள், சரித்திர ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஏன் இந்தத் தீவிரவாதம் எல்லாம்?” ”நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது? என் ஆராய்ச்சி மாணவனை அழைத்துவரும்போது ஏதோ பிழை ஏற்பட்டிருக்கிறது. டெலிபோர்ட்டிங்தான் அதற்குப் […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 31 அரங்கத்தின் பெரிய திரையில் படத்தில் பிரவீண் ஒரு நபருக்குப் பொன்னாடை அணிவித்துக்கொண்டிருந்தார். பின்னணியில் ஒரு குரல் “நீங்கள் இந்த இடத்துக்கு வந்ததும் பொன்னாடையை ஏற்க வேண்டும். கைகள் இரண்டையும் நேராக வைத்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவரைத் தொடவோ கைகளைக் குலுக்கவோ முனையக்கூடாது. கை குலுக்கல் பட்டயம் வழங்கிய பிறகுதான் நடைபெறும்.” என்று ஆணைகளை உதிர்த்துக்கொண்டிருந்தது. அரங்கத்தில் பெரிய பெரிய வட்ட மேஜைகளில் ஆறு ஆறு பேராகப் பலரும் அமர்ந்திருந்தனர். யாரும் அந்தத் திரையை மதித்தது […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 30 சடகோபன் கதவு திறக்கப்பட்டதையும் பிரஜாபதி கோபத்துடன் உள்ளே நுழைந்ததையும் பார்த்தார். அசையவில்லை. அசைய முடியவில்லை. “உங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டுவிட்டேன். வரலாற்றுப் பேராசிரியர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.. ஒரு காலத்தில் மின்வழிப்பயணத்துக்கு எதிராகப் போராட்டம் எல்லாம் நடத்தியவர்.. ஆனால் மூளை என்பது கொஞ்சம்கூட இல்லை.” சடகோபன் எச்சில் விழுங்க முயற்சி செய்தார். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்ததால் முடியவில்லை. தொண்டை வலித்ததுதான் மிச்சம். “ஒரு வெடிகுண்டு நிபுணனைக் கஷ்டப்பட்டு இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறீர்கள், என்ன என்னவோ பெரிய […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 29 பல்வீர் தன்னுடைய சட்டையைச் சரி செய்துகொண்டார். கழுத்துப்பட்டையைக் கட்டியபோது முதல்முறை நீளமாக வந்தது.  அடிக்கடி செய்தால் ஒழுங்காக வரும். சரி செய்து நேராகக் கட்டினார். விடுதி அறையின் வாசல் அழைப்பு மணி பாடியது. அவசரமாகத் திறக்கப் போகும் வழியில் மிதியடி தடுக்கியது. சகுனம் என்ற வார்த்தை அவர் மனதில் தோன்றியது. இந்த வார்த்தையெல்லாம் கேள்விப்பட்டு எவ்வளவு நாள் ஆகிறது. எப்படி திடீரென்று தோன்றுகிறது? வெளியே ஒரு கருஞ்சட்டைச் சீருடை. “ஐந்து நிமிடம்.. தயாராகிவிட்டேன்.” கோட்டை […]

புத்தகப்பார்வை : ஓநாய் குலச்சின்னம்

ஆசிரியர் : ஜியாங்க் ரோங் , தமிழில் : ஜி.மோகன் எழுதியவர் : எழுத்தாளர் பால்கரசு சசிகுமார், அபுதாபி சீன மொழியில் எழுதப்பட்டு, பிரபலமான ‘wolf totem’ என்ற நாவலை திரு. சி.மோகன் அவர்கள் ‘ஓநாய் குலசின்னம்’ என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்நாவல் மங்கோலிய மேய்ச்சல் நில மக்களின் பின்னணிக் கதைகள் மற்றும் சீன விளைச்சல் நில மக்களால் சுற்றுப்புற சூழல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் மிக விரிவாகப் பேசுகிறது. மங்கோலிய மக்களின் […]

இல்லாதவர்கள் என்று எவருமில்லை – ஜெஸிலா பானு

ஜெஸிலா பானு இல்லாதவர்கள் என்று எவருமில்லை. ஏதாவதொன்று எல்லாரிடத்திலும் இருக்கதான் செய்கிறது. எனக்குத் தேவையில்லாதது வேறொருவருக்கு அவசியமானதாக இருக்கலாம். அவருக்குத் தேவையற்றது என்று கருதுவது மற்றவருக்கு வேண்டியதாகிவிடலாம். எல்லோரிடமும் ஏதோ ஒரு தேவையற்றது மற்றவருக்குத் தேவையானதாக இருக்கதான் செய்கிறது. இன்று நமக்குத் தேவை என்று வாங்கிய பொருள் சில காலம் கழித்துத் தேவையற்றதாகிவிடும். அப்படியாகும் போது அதனைத் தேவையில்லாமல் வீட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக இன்னாருக்கு உதவக் கூடுமென்று நினைப்பவருக்குக் கொடுத்து விடலாம். அல்லது கொடுப்பவருக்குக் கொடுத்தால் வேண்டுபவருக்குப் […]

முதல்ல கிச்சன்ல இருந்து வெளில வாங்க – சென் பாலன்

மருத்துவர் சென் பாலன் தமிழ்நாட்டு உணவுப் பழக்கவழக்க முறையின்படி சாப்பிட வேண்டுமானால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒருவர் தினசரி எட்டு மணி நேரத்திற்கும் குறையாமல் அடுக்களையில் உழைத்து சமைக்க வேண்டும். அலுவலகத்திற்குச் சென்று எட்டு மணி நேரம் கடும் பணி செய்வதற்கு ஒப்பானது அது. இவை இல்லாமல், காய்கறி மளிகை பொருட்கள் வாங்குவதற்கான நேரம் தனி. என்ன சமைக்கலாம் என யோசிப்பதில் வீணாகும் நேரம் தனி. மசாலா பொருட்கள், பொடி வகைகள் அரைப்பதற்கான நேரம் தனி. […]

கதையல்ல வாழ்வு – 11 “சக்கர நாற்காலி பேசுகிறது “

ஹேமா சக்கர நாற்காலி பேசுகிறது   இதழ்கள் மட்டுமல்ல சிலருக்கு கண்களும் பேசும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். வாய் பேசாது, கை பேசும் பார்த்துக்கோ! என்று கோபத்தில் நண்பர்கள் கூறுவதுமுண்டு. உடல் அங்கங்கள் மட்டுமில்லை பலருக்கும் உடல் அங்கமாக செயல்படும் சக்கர நாற்காலியும் பேசலாம். சக்கர நாற்காலியின் பேச்சை சற்று விளக்கமாக கேட்போம். நீங்கள் எப்பொழுதாவது சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா? அல்லது சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்பவர்களைப் பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால் கட்டுரையை வாசித்துவிட்டு தெரியப்படுத்துங்கள். […]

கதையல்ல வாழ்வு – 10 “பார்வையற்றவர்களின் விசாலமான பார்வை”

ஹேமா  பார்வையற்றவர்களின் விசாலமான பார்வை   நாம் கண்களால் மட்டுமே பார்க்கிறோமா? கண்களுக்கும் பார்வைக்கும் மட்டும்தான் தொடர்பிருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் பதிலாக இருக்கும். புத்தரும் காந்தியும் கால்களால் இவ்வுலகத்தைப் பார்த்தவர்கள் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது. பயணத்தால் அது தரும் அனுபவத்தால் இவ்வாழ்வை அளந்த இரு பெருந்தலைவர்கள் அவர்கள். ஆக பார்ப்பதற்கு கண்கள் ஒரு கருவி. கண்கள் இல்லாமலும் பார்க்க இயலும். கண்பார்வை இல்லாமல் தன் அறிவால் மனதால் விசாலமான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் கண்பார்வையற்ற […]

கதையல்ல வாழ்வு – 9 “சாலையோர வியாபாரிகள்”

ஹேமா  சாலையோர வியாபாரிகள்  சாலையோர வியாபாரம் அடிப்படை உரிமையா இல்லை அத்துமீறலா என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்குள்ளும் தோன்றும். மழைக் காலங்களில் பல சாலையோரக் கடைகள் அகற்றப் படுவதை நாம் பார்த்திருப்போம். அப்போதெல்லாம் அவர்கள் வாழ்வாதாரம் என்னவாகும் என்ற எண்ணமும் கூடவே தோன்றும். ஏன் இவர்கள் சாலையோரத்தில் கடை வைத்திருக்கிறார்கள்? பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதல்லவா என்று கூட புரியாத வயதில் யோசித்ததுண்டு  எல்லோராலும் வியாபார கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ வியாபாரம் […]

கதையல்ல வாழ்வு – 8 “துப்புரவு? தூய்மை? மனிதம்?”

ஹேமா  துப்புரவு? தூய்மை? மனிதம்?  காட்சி 1:  1978 ல் நாகர்கோவிலில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த சம்பவம் இது.  வேகமாக பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சரசு. பள்ளியில் ஆயா வேலைக்கு சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இருபது வயதில் திருமணமாகி இருபத்தோரு வயதில் குழந்தை பிறப்பு, இருபத்தாறு வயதில் கணவரின் மரணம் என்று வாழ்க்கை அவளை புரட்டிப் போட்டிருந்தது. ஐந்து வயது மகளையும் அதே பள்ளியில் சேர்த்துவிட்டு தானும் […]

கதையல்ல வாழ்வு – 7 “கைவிடப்பட்ட முதிய குழந்தைகள்”

ஹேமா கைவிடப்பட்ட முதிய குழந்தைகள்  ‘பெத்த மனம் பித்து. பிள்ள மனம் கல்லு’ என்ற சொல்லாடலை நாம் பலரும் கேட்டிருப்போம். நம் பெற்றோரிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். அவர்களுக்கு அக்கறையாக தினமும் தொலைபேசுகிறோமா அல்லது அடிக்கடி நேரில் சென்று பார்த்துக் கொள்கிறோமா? அவர்கள் நம்மைப் பற்றி பதறும் காரியங்களில் நாம் எவ்வளவு மெத்தனமாக இருக்கிறோம். அதையே நம் பிள்ளைகள் என்று வரும்போது நம் கவனம் எப்படி மாறுகிறது, நாம் எப்படி பதறுகிறோம் என்கிற வித்தியாசத்தை உற்று […]

கதையல்ல வாழ்வு – 6 “தெய்வம் தந்த வீடா வீதி ? “

ஹேமா தெய்வம் தந்த வீடா வீதி?  கவிஞர் சுந்தர ராமசாமியின் கதவைத் திற என்ற கவிதையைப் பலரும் சிலாகித்து சொல்ல, கதவு இருப்பவன் சிலாகிக்கலாம். கதவு, ஜன்னல், வீடு என்று ஏதுமில்லாதவன் எப்படி சிலாகிப்பது என்று கேட்டார் கவிஞர் யுகபாரதி அவர்கள். வாடகை வீட்டில் இருந்துகொண்டு எப்படியாவது சொந்த வீடு கட்டி விட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலரையும் நாமறிவோம். வீடு என்ற ஒன்றே கனவாகச் சாலைகளில் வசிக்கும் மனிதர்களைப் பற்றி நாம் நினைத்து பார்த்ததுண்டா? அது […]

கதையல்ல வாழ்வு – 5 “வீட்டுப் பணியாளர்களுடன் ஓர் உரையாடல்”

ஹேமா வீட்டுப் பணியாளர்களுடன் ஓர் உரையாடல் நிகழ்வு 1 : அக்கா, ரெண்டு நாள் லீவ் வேணும். குழந்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்ல.  வேலைக்கு சேரும்போதே சொல்லித்தானே சேத்தேன். இடையில லீவு கேட்க கூடாதுன்னு. இப்ப வந்து லீவுன்னா எப்படி? இல்லக்கா குழந்தைக்கு ரொம்ப ஜுரம். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போணும். அதான் லீவு வேணும்.  எனக்கு ஆஃபிஸ் வேல தலைக்கு மேல இருக்கு. வேலைக்கு வீட்ல ஆளில்லாம என்னால ஒன்னும் செய்ய முடியாது. லீவெல்லாம் தர முடியாது. […]

கதையல்ல வாழ்வு – 4 “தோள் கொடுக்கும் தோழர்கள்”

ஹேமா  தோள் கொடுக்கும் தோழர்கள்  வெளிநாட்டு வாழ்க்கையென்பது பலரின் கனவு. கந்து வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்றவர்கள், ஏஜென்ட் மூலமாக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளாக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் என கடை நிலை முதல் எல்லா நிலைகளிலும் ஆயிரமாயிரம் கனவுகளோடு வெளிநாட்டு வாழ்க்கைக்குச் சென்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பலர் வெளிநாட்டு வாழ்வில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். பொருளாதார நிலையில் மேம்பட்டிருக்கிறார்கள். தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும், உறவினர்களையும் பொருளாதாரத்தில் மேம்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இவ்வாழ்வில் எல்லோருக்கும் சமமான வாய்ப்போ […]

கதையல்ல வாழ்வு – 3 “நிஜவாழ்வின் நாயகர்கள்”

ஹேமா நாயகப் பிம்பம் என்பது நம் சினிமாக்களின் வழியாக இயல்பாக நாம் பார்க்கும் ஒன்று. திரைப்பட நாயகர்களின் மீதுள்ள அன்பு என்பது பித்து நிலைக்கு மாறும் அபாயத்தையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். திரைப்பட ஹீரோக்களின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம், தலைவா தலைவா என்று அவர்களின் வீட்டு வாசல்களில் முன்பு கோஷமிடும் மக்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த சினிமா நாயகர்களில் பெரும்பாலோர் இச்சமூகத்திற்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  த ரியல் ஹீரோஸ் […]

கதையல்ல வாழ்வு – 2 “ஒளிரும் கட்டிடங்களும், ஒளிந்திருக்கும் மனித உழைப்பும்”

ஹேமா  ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது. இலக்கணத்தின் செய்வினை செயப்பாட்டுவினைக்காக இந்த வாக்கியத்தைச் சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தாள் உறவினரின் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் வினிதா. உண்மையில் ஷாஜகான்தான் தாஜ்மகாலைக் கட்டினாரா? உயரமான பிரம்மாண்டமான கட்டிடங்களையெல்லாம் யார் கட்டினார்கள்? அதற்காக பணம் செலவழித்தவர்களால்தானே அந்தக் கட்டிடம் கட்டட்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  என் அப்பா கட்டிய வீடு, அம்மா கட்டிய வீடு என்பது நாம் பலரும் சொல்லும் வாக்கியங்கள். அம்மா அப்பாவின் உழைத்த பணம் […]

கதையல்ல வாழ்வு – 1 “உயிர் காக்கும் ஊழியர்கள்”

ஹேமா உயிர் காக்கும் ஊழியர்கள் சம்பவம் : 1 ஆம்புலன்ஸின் சைரன் நிறுத்தப்பட்டிருந்தது. நோயாளியைச் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட்டு தன் ஆம்புலன்ஸ் வண்டியை நோக்கி விரைந்தார் டிரைவர் ரவி. கைகழுவிவிட்டு களைப்பாக தன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.  மணி நண்பகல் பன்னிரெண்டு ஆகியிருந்தது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்ற நினைப்பே அப்போதுதான் வந்தது. வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்திலிருந்து இட்லியை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார். அரை இட்லி சாப்பிட்டுக் […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 12 – முடிவு

ஜெஸிலா பானு  உங்களுக்கு ஒரு வரம் கிடைக்குமென்றால் என்ன கேட்பீர்கள்? சட்டென்று ஒன்றை சொல்லிவிட முடியுமா? சில அதிபுத்திசாலிகள் ‘நான் கேட்பதெல்லாம் நிறைவேற வேண்டும்’ என்ற வரத்தை கேட்பார்கள். அது ஒட்டுமொத்தமாக தனக்கு வேண்டிய அத்தனையும் கிடைக்க வேண்டும் என்பதற்கான உக்தியே தவிர, குறிப்பாக ஒன்றே ஒன்று வேண்டும் என்றோ, இது மட்டும் போதும் என்றோ திருப்தியடையாத மனதை பிரதிபலிக்கிறது. இதனை முடிவெடுக்க முடியாத மனம் என்று சொல்லலாமா?  வாழ்க்கையில் இழந்துவிடவே கூடாது என்று ஏதாவது ஒன்றே […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 11 – உள்ளுணர்வு

ஜெஸிலா பானு இதுதான் நடக்கப் போகிறது என்றோ இது நடந்துவிடும் என்றோ என்றாவது உங்களுக்குத் தோன்றியது அப்படியே நடந்துள்ளதா? ’நான் அப்பவே நினைத்தேன், என் மனசுல பட்டது’ என்று என்றாவது புலம்பியிருக்கிறீர்களா? உங்களுக்கு அப்படி நடந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு நிறையவே அப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன.   நான், கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்ததும் அவர்கள் யாரென்றே தெரியாதவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு ‘இந்தக் குழந்தைதான்’ அதாவது ஆண்/ பெண் குழந்தை என்று என்னால் சரியாகக் கணிக்க முடியும். […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 10 – அணுகுமுறை

ஜெஸிலா பானு எங்கள் நிறுவனத்தில் ஒரு புதிய மென்பொருளை அமலுக்கு கொண்டு வந்திருந்தார்கள். இன்றிலிருந்து இதைத்தான் பயன்படுத்த வேண்டும், அதற்கான பயிற்சி இன்னும் ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. எல்லாருமே கலந்து கொள்ள வேண்டும், சந்தேகமிருந்தால் அங்கேயே கேட்க வேண்டும், பயிற்சி முடிந்தவுடன் செயல்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டனர். நாங்களும் தயார் ஆனோம்.   பயிற்சி முடிந்தவுடன் பெரும்பாலானவர்கள் புதிய மென்பொருள் சரியில்லை, பயனில்லை, கடினமானது, இருக்கும் மென்பொருளே அருமையானது என்று தங்களது அதிருப்தியை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்தினர். […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 9 – கனவு மெய்ப்பட

ஜெஸிலா பானு  முன்பெல்லாம் தினமும் கிட்டத்தட்ட 45 கி.மீ. துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு வண்டி ஓட்ட வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் பறக்கும் கார் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். என்னைப் போலவே யாரோ பறக்கும் காரை கற்பனைச் செய்து காட்சிப்படுத்தி அதனைச் செயல்படுத்தியும் இருக்கிறார்கள். விரைவில் துபாயில் பறக்கும் கார் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.  கற்பனை செய்வதெல்லாம் நனவாகுமா? ஆகும். ஆனால் எப்படி கற்பனை செய்கிறோம் என்பதைப் பொருத்தது.  உங்கள் கற்பனைக் குதிரையைத் […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 8 – நேர்படப் பேசு

ஜெஸிலா பானு  பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் விட்டுவிட்டு, இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோமே என்று நீங்கள் வருத்தப்பட்டதுண்டா? நீங்கள் நினைப்பதைத் தெளிவாகவும் அமைதியாகவும் உறுதியாகவும் நேர்பட வெளிப்படுத்தினாலே உங்களுடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமென்று சொன்னால் நம்புவீர்களா? அதைப்போலவே ’இல்லை’, ’முடியாது’, ’வேண்டாம்’ என்று தைரியமாகச் சொல்வது எத்தனையோ பிரச்சினைகளை வரவிடாமல், வளரவிடாமல் தீர்க்கும் என்றால் ஒப்புக்கொள்வீர்களா?  வேலைக்கான நேர்முகத்திற்குச் சென்றிருக்கிறீர்கள், ‘அடுத்த மூன்று ஆண்டில் நீ என்னவாக இருப்பாய்’ என்று கேள்வி கேட்கப்பட்டால், ’வாழ்க்கையே நிச்சயமில்லை, […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 7 – தேவையற்ற பயம்

ஜெஸிலா பானு  உங்களை அப்படியே ஒரு பழைய படத்தின் காட்சிக்குள் அழைத்துச் செல்லப் போகிறேன். ’சின்னஞ்சிறு உலகம்’ என்ற படத்தில் ஒரு காட்சி. அதில் நடிகர் நாகேஷ் தன்னிடம் வேலை செய்யும் பெண்ணின் திருமணத்திற்குச் செல்வார். அங்கு இருக்கும் குத்துவிளக்கில் எரியும் தீச்சுவாலையைக் கண்டதும் அழுவார். முதலாளி அழுவதைக் கண்டு மணப்பெண் அழுவார். அதைக் கவனித்த மணமகன், அவன் திருமணம் செய்யப் போகும் பெண்ணுக்கும் முதலாளி நாகேஷுக்கும் காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டு அவரும் அழுவார். […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 6 – மூல நம்பிக்கை

ஜெஸிலா பானு  நாம் எத்தனையோ ‘கருத்து கந்தசாமிகளை’ சந்தித்திருப்போம். ஏன் நாமே கருத்து கந்தசாமியாகச் சில சமயங்களில் நடந்து கொண்டிருப்போம்.. எதுவுமே தெரியாத மாதிரி சில இடங்களிலும், எல்லாமே தெரிந்தாற்போல் சில இடங்களிலும் நடந்து கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இந்தக் ‘கருத்து’ உதயமாகும் இடம் எது என்று சிந்தித்துப் பார்ப்போமா? கருத்துகள் உதயமாவது நம் அனுபவத்திலிருந்தா? உணர்வுகளிலிருந்தா? அனுமானத்திலிருந்தா? கற்றலிலிருந்தா? ஆழந்து யோசித்தால் பெரும்பாலான கருத்துகளுக்கு மூலக் காரணம் நம்முடைய அடிப்படை நம்பிக்கைகள்தான் என்பது […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 5 – மறத்தல் நன்று

ஜெஸிலா பானு சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு என்று ஏதேதோ படித்திருப்போம். ஆனால் வாழ்க்கைப் பாடமென்று நமக்கு சொல்லித் தரப்படுவதில்லை. அப்படியே சொல்லித் தந்தாலும் நம்மால் கடைப்பிடிக்க முடியுமா? அமைதியான ஆரோக்கியமான இன்புற்ற நிலையில் நம் மனம் எப்போதுமே இருக்க வேண்டுமென்று யார் தான் விரும்பமாட்டார்கள்? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? யோசிக்கலாமா? ஏமாற்றம், ஆற்றாமை, துரோகம், பகை, பொறாமை இப்படிப்பட்டவற்றில் நாம் சிக்கிக் கொள்ளும்போதுதான் நம் மனம் அதிக அழுத்தத்தில் […]

நலம் வாழ : கட்டுரைத் தொடர் 4 : கேள்-கவனி

ஜெஸிலா பானு  நலமா?  நான் நலம்.  இப்படிக் கேட்கவும், சொல்லவும் எல்லோருக்குமே யாராவது ஒருவராவது தேவைப்படுகிறார்கள் அல்லவா? அதுகூட இல்லையெனும் போது வாழ்க்கையில் விரக்தி ஏற்படும் அல்லவா?  காதலன் பல கனவுகளுடன் தன் காதலியை மிகவும் ரம்யமான காதல் கசியும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிடித்த ஒரு பொருளை அவளுக்குப் பரிசளித்து, அவள் கண்ணைக் காதலுடன் பார்த்து ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லும்போது, அவள் அதைக் கவனியாமல் அந்தப் பரிசை அந்த இடத்தின் பின்னணியில் […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 3 – அக மகிழ்

ஜெஸிலா பானு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ”மகிழ்ச்சி எங்கிருந்து வருது தெரியுமா?” இதையே நீங்கள் வடிவேல் காமெடியில் வர ’இசை எங்கிருந்து வருது தெரியுமா?’ தொனியில் வாசித்துப் பாருங்கள் தன்னால் சிரிப்பு வரும். சிரித்தீர்களா? இந்தத் தருணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் அப்படிதானே? இப்போதுதானே புன்முறுவல் தந்தீர்கள், அப்போது அதை நான் மகிழ்ச்சி என்று எடுத்துக் கொள்ள முடியாதா? அதானே, உங்கள் மகிழ்ச்சிக்கு நான் எப்படி உத்திரவாதம் தர இயலும்? ஆனால் இந்தக் கட்டுரையை நான் எழுதி முடித்தால் […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 2 – மனம் தெளிநிலை 

ஜெஸிலா பானு அலுவலகத்திற்குச் செல்லும் முன் வேறொரு சந்திப்பை நிகழ்த்திவிட்டுச் செல்ல வேண்டும் என்று கிளம்பினேன், ஆனால் கடற்கரை குதிரை போல் என் வண்டி தன்னால் அலுவலகத்தை நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தது. நான் மட்டுமா இப்படியென்றால், இல்லை பெரும்பாலானவர்களும் இப்படிதான். என்ன? ’இல்லை’ என்கிறீர்களா? ஓர் அறைக்குச் சென்றுவிட்டு ‘இங்கு எதற்காக வந்தோம்’ என்று யோசித்திருக்கிறீர்களா இல்லையா? செல்பேசியை எடுத்துவிட்டு ‘யாரை அழைக்க இருந்தேன்’ என்றும் தடுமாறியிருப்பீர்கள். ஏன் இப்படி நிகழ்கிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா?  இளம் வயதில் […]

நலம் வாழ : கட்டுரைத் தொடர் 1

ஜெஸிலா பானு அலாவுதீனுக்கு அற்புத விளக்குக் கிடைத்தது போல் நமக்குக் கிடைத்தால் முதலில் நீங்கள் விளக்கைத் தேய்த்து என்ன கேட்பீர்கள்?  ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நம் அனைவரிடமும் விளக்கு இருக்கிறதோ இல்லையோ, கேட்டவுடன் நிறைவேற்றிவிடும் பூதம் உள்ளது. ஆனால் அதை நாம் பெரும்பாலான நேரத்தில் சரியாகப் பயன்படுத்துவதில்லை.  நான் பூதம் என்று சொல்வது உங்களுடைய மனவோட்டத்தை, சிந்தனையை, நேர்மறையான எண்ணத்தின் ஆற்றலைப் பற்றிதான்.  ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது ஒருவிதமான காரை நீங்கள் வாங்கவேண்டும் என்று ஆழமாக […]

அடுத்த தலைமுறைக்கான விதை – நசீமா ரசாக்

நபி(ஸல்) அவர்களிடம் வந்த முதல் இறை வசனம், ‘படி(இக்றா)’ என்பதுதான். ஏன் இறைவன் ‘படி’ என்று சொன்னான் என்பதை புத்தகம் வாசித்தால் புரியும். ஒவ்வொரு புத்தகமும் பல பொக்கிஷங்களை தன் பக்கங்களுக்கு இடையில் மறைத்து வைத்துள்ளது. நாம் வாசிக்கும்போது அவை அழியாத செல்வங்களாக நமக்குள் வந்துவிடுகிறது. வாசிப்பு இல்லாதவருக்கு அவரவரின் வாழ்வனுபவம் மட்டுமே. ஆனால் வாசிப்பவருக்கோ வேறுபட்ட பல்வேறு மக்களின் வாழ்வனுபவம் கிடைக்கும். இந்த அனுபவங்கள் அனைத்தும் நம் பார்வையை மேலும் விசாலமாக்கும் அதுமட்டுமில்லை. இருந்த இடத்திலிருந்துகொண்டே, […]

வாசிப்பு மட்டுமே – கவிஞர் இசாக்

வாசிப்பு என்பது, சிந்தனைக்குப் புத்துணர்வூட்டும் செயல். ஒவ்வொரு நூலை வாசித்து முடிக்கும் போது, இன்னொருவரின் அறிவை, ஆற்றலை, அனுபவத்தைப் பெறுகிறீர்கள். எளிதான வழியில் நம்பிக்கையை, உற்சாகத்தை பெற ஒரே வழி வாசிப்பு மட்டுமே. -கவிஞர் இசாக்

குழந்தைகளுக்கான கதை சொல்லல் – பாலாஜி பாஸ்கரன்

சிறுவயதிலிருந்து கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களில் படித்திருந்ததால் பைபிள் பற்றியும் இயேசுநாதர் பற்றியும் ஓரளவுக்கு அறிந்திருந்தேன்… முதுகலைப் படிப்பு படிக்கும் காலத்தில் நண்பன் சையது அப்துல் சத்தார் மூலமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் ஒரளவுக்கு கிடைத்தது… “இஸ்லாம் மதமல்ல மார்க்கம், அப்பு” என்று அடிக்கடிச் சொல்வான்… அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு வாக்கில், இணையத் தமிழ் நண்பர்களிடம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று தெரிந்தவனாகத் தொடங்கி இன்று தம்பியாகிப் போன முஹம்மது இஸ்மாயில் புகாரி மூலமாக இன்னும் இன்னும் […]

ஏன் படிக்க வேண்டும்? – ‘பெனாத்தல்’ சுரேஷ்

“சரியான முடிவுகள் அனுபவத்தால் எடுக்கப்படுகின்றன, அனுபவங்கள் தவறான முடிவுகளால் பெறப்படுகின்றன” – என்று ஒரு பழமொழி உண்டு. அனுபவம் பெற நம்முடைய முடிவுகள் மட்டுமே தவறானதாக இருக்கவேண்டியதில்லை. மற்றவர்கள் வாங்கிய அடியில் பாடம் கற்பதும் அனுபவத்தைத் தரும். மற்றவர்கள் என்பவர்கள் நாம் அறிந்த உறவினராகவோ ஊர்க்காரராகவோ இருந்தால், அப்படிப்பெற்ற அனுபவம் உறவையும் ஊரையும் தாண்டிப் பயன் தராது. உலகக் கிராமத்தின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு மனிதனின் அனுபவத்தையும் பெற புனைவுகளும் வரலாறும்தான் துணை. திரைக்காட்சிகளில் […]

ஒருவித கடமை – ஆசிப் மீரான்

தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருப்பவர்களுக்கு மொழியில் புலமை இயல்பாகி விடும். மொழியின் அழகுணர்ச்சி மட்டுமல்லாமல் மொழியின் மீதான ஆளுமையும் மேம்படும். பல்வேறு விதமான வாசிப்பனுபவங்கள் மனித மனங்களிடையே மாற்றத்தையும், புதிய அனுபவங்களையும் தர வல்லவை. தொடர்ந்த வாசிப்பினால் மொழி வசப்படுவதால் பேச்சாளுமையுமே கூட கை கூடும். நிறைய வாசிக்கையில் கலை, பண்பாடு குறித்த தெளிவும் அறிவும் மேலும் விரிவாகும். நம் மதிக்கூர்மையின் அளவு பெருக வாசிப்பும் ஒரு காரணமாக அமையுமென்பதால் வாசிப்பை நேசிப்பது ஒரு வித கடமையென்றே சொல்லலாம். […]

வாழ்வும்-வாசிப்பும் – சசி.S.குமார்

“நீர்க்கோல வாழ்வை நச்சி…” என்று கம்பன் எழுதிய வார்த்தைகள் வாழ்வின் நிலையாமையைச் சொல்லும். சின்னஞ்சிறிய வாழ்க்கை. சாசனம் எழுதித்தந்து நூறாண்டு வாழ்ந்தாலும், வாழ்நாட்கள் சற்று ஏறக்குறைய வெறும் 36,500 நாட்கள் தான். கல்பகோடி ஆண்டுகள் வாழ்கிற, வாழப்போகிற பேருலகில்…நமது வாழ்நாள் வெறும் 36,500 நாட்கள் தான். இதற்குள் தான் அத்தனை ஆரவாரம். அத்தனை அலட்டல். அத்தனை அழிச்சாட்டியம். அத்தனை அலட்சியம். இத்தனைக்கும் நூறாண்டு வாழ்வோம் என்பதற்கு எந்தவித உறுதியும் யாரும் தரவும் இல்லை. Trial & error […]

வாசிப்பு என்ன செய்யும்? – பேச்சாளர் ஹேமலதா

நான் மிகச்சிறந்த வாசிப்பாளரில்லை. சமீப வருடங்களில்தான் என் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திருக்கிறேன். காலம் நம் மேல் வீசும் கற்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, புரிந்து கொள்ளவே இயலாத இவ்வாழ்வைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வாசிப்பு பழக்கம் பேருதவியாக இருக்கலாம். ஒரு சரியான புத்தகத்தின் முன்னிலையில் நாம் ஒரு காலி பாத்திரமாக நம்மை மாற்றிக்கொள்ள மெல்ல நம்மை நிரப்பிக்கொள்ளலாம். நம்மை நாமே காலி செய்வதும் நிரப்பிக் கொள்வதும் தொடர் நிகழ்வுகளாக நடக்கும் வாசிப்பினூடே. புத்தகங்கள் தரும் அறிவு வாழ்வு தரும் அனுபவத்தோடு இணை […]

வாழ்க்கைக்கு போதாது – களந்தை. பீர் முஹம்மது

புத்தகங்களைப் பிடிக்கும் கைகள் நறுமணம் மிக்கவை! புத்தகங்களை வாசிக்கும் கண்கள் ஒளிமிக்கவை! புத்தகங்களை உள்வாங்கும் இதயம் கனிகளின் தோட்டம்! நம் அறிவின் சுடரை ஏற்றுவன இந்தப் புத்தகங்களே! நாம் வாழுகின்ற இந்த ஒரேயொரு வாழ்க்கை நமக்குப் போதுமானதன்று.வாழ்க்கை சோலையாகவும் பெருங்கடலாகவும் விரிந்திருக்கின்றது. அவ்வாழ்வைப் பன்முகமாக வாழவும், நீந்திக் கடக்கவுமான வழிகாட்டிகள் நம் கையில் தவழப் போகும் நூற்களே! -களந்தை.பீர் முஹம்மது

தன் நிலை உணர – லதா

வாசிப்பு தன் நிலை உணர வைக்கும், சக மனிதர்களை புரிய வைக்கும், மனதை விசாலமாக்கும், இவ்வுலகையே தன்னுள் காண வைக்கும், மொத்தத்தில் நம்மை “வாழ” வைக்கும். வாசிப்பிற்கு இணையான ஒரு தோழனை நான் இதுவரை கண்டதில்லை…. எனதொரு வாழ்வில் பலர் வாழ்வை, கண்டு, உரையாடி, உணர்ந்து, பார்வை விசாலமாகி, மனது பக்குவமாகி என என் ஒவ்வொரு புரிதலிலும் உடன் நின்றது, நிற்பது புத்தகங்களே! -எழுத்தாளர் லதா

ஏன் வாசிக்க வேண்டும்? – பரிவை.சே.குமார்

வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும். வாசிக்க வாசிக்க அதன் வாசனையை உணர ஆரம்பிக்கலாம். தொடரந்து வாசிப்போம்.. வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும். வாசிக்க வாசிக்க அதன் வாசனையை உணர ஆரம்பிக்கலாம். தொடரந்து […]

மனத்திற்கான புத்துணர்வு – தெரிசை. சிவா

உழன்று சுழலும் இயந்திர வாழ்க்கையில் உடலுக்கான புத்துணர்வு உடற்பயிற்சியால் கிடைப்பதைப்போல், மனத்திற்கான புத்துணர்வு புத்தக வாசிப்பால் மட்டுமே வசப்படும்.  “வாசிப்பு” மனதை இலகுவாக்குவதோடு, வாழ்வில் எதிர்வரும் பிரச்சனைகளைப்  பற்றிய விசாலமானப் பார்வையை வாசகனுக்கு கடத்துகிறது.  ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நல்ல நண்பர்களுக்கு ஈடானது என்கிறார்கள்.  வரலாற்றில் சாதித்த அனைத்து மனிதர்களுக்கும் புத்தகம் ஒரு நல்ல நண்பனாக இருந்திருக்கிறது.  ஒருமித்த சிந்தனை, தார்மீக எண்ணங்கள், தனிமனித  புரட்சி உட்பட்ட அனைத்து அகண்ட உணர்வுகளும் வாசிப்பதால் வலுப்பெறுவதை நம்மால் உணர முடியும்.  வாசிப்பின் மற்றுமொரு அதிசயம் அது தனிமனிதனின் பகுப்பாய்வு சிந்தனையை அதிசயக்க வகையில் உயர்த்துகிறது […]

Muthukrishnan

புத்தகம் – அ.முத்துக்கிருஷ்ணன்

சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப் போல, வாசிப்பின் நெடியேறியவர்களால் புத்தகங்களை ஒருபோதும் கைவிட முடியாது. புத்தகம்தான் இந்த உலகின் பெரும் ரசவாதி.

உள்ளீடு – செயல்முறை – வெளியீடு (Input – Process – Output) – மருத்துவர் சென் பாலன்

இந்த மூன்று செயல்பாடுகளும் உலகின் அறிவார்ந்த அசைவுகள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைகின்றன. ஓர் ஆராய்ச்சி என எடுத்துக்கொண்டால் தரவுகளை சேகரித்து உள்ளீடாகக் கொடுத்து, அதை process செய்து, ஆராய்ந்து, செயலாக்கப்பட்ட தரவுகளாக்கி அதிலிருந்து முடிவுகளை வெளியீடாக எட்டுவதில் அந்த ஆராய்ச்சியின் வெற்றி உள்ளது. ஆராய்ச்சி என்றவுடன் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அளவிற்கு செல்ல வேண்டாம். சமையலுக்கு அரைக்கிலோ புளி வாங்க வேண்டுமென்றால் கூட எந்தக்கடையில் தரமாக இருக்கும், எங்கு விலை குறைவாக இருக்கும் போன்ற […]

வாசிப்பு 

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (இலங்கை) வாசிப்பு ஒருவரை முழுமையடையச் செய்கின்றது. ”கண்டது கற்கப் பண்டிதனாவான்” என்பது முதுமொழி. ஆனால் எதனைக் கற்கவேண்டும் என்பதற்கு ஒரு வரன்முறை வேண்டும். அதற்கான வழிமுறையை நமக்கு வள்ளுவனார் வரையறை செய்துள்ளார். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்னுங் குறட்பாவில் ”கற்பவை” என்னும் சீரில் அதனைச் சுருங்கக் கூறியுள்ளார். படிக்கப்படிக்க நாம் படிக்காதவை புரியும். மேலும் படிக்கத் தூண்டும். மொழி வாலாயமாகும். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களே பிற்காலத்தில் அறிஞர்களாகவும், […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 28 கல்பனா சன்னாசி அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18அத்தியாயம் – 19 அத்தியாயம் – […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 27 கல்பனா சன்னாசி அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18அத்தியாயம் – 19 அத்தியாயம் – […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 26 கல்பனா சன்னாசி அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18அத்தியாயம் – 19 அத்தியாயம் – […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 25 கல்பனா சன்னாசி அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18அத்தியாயம் – 19 அத்தியாயம் – […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 24 கல்பனா சன்னாசி அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18அத்தியாயம் – 19 அத்தியாயம் – […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 23 கல்பனா சன்னாசி அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18அத்தியாயம் – 19 அத்தியாயம் – […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 22 கல்பனா சன்னாசி அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18அத்தியாயம் – 19 அத்தியாயம் – […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 21 கல்பனா சன்னாசி அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18அத்தியாயம் – 19 அத்தியாயம் – […]

கேலக்ஸியின் கதைப்போமா…

கேலக்ஸியின் ‘கதைப்போமா’ நிகழ்வின் மே மாதக் கூட்டம் கடந்த 17-ம் தேதி துபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போதெல்லாம் பெரியவர்களை விட குழந்தைகளே வாசித்தலைப் பகிர்ந்து கொள்வதில் – குறிப்பாக கதை சொல்வதில் – மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். தாங்கள் வாசித்த ஆங்கிலக் கதைகளை மழலைத் தமிழில் – அவ்வப்போது ஆங்கிலமும் கலந்து – அவர்கள் சொல்வது அழகு, அதைக் கேட்பது ஆனந்தம். இந்த மாதம் முதல் சில புத்தகங்களை வாசிப்பிற்கெனக் கொடுக்கலாம் என முடிவெடுத்து ‘புத்தகப் […]

Shopping cart close