அத்தியாயம் – 22
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
“பிரேக்ஃபாஸ்ட் சாப்ட்டுட்டுப் போடா” தோசைக் கரண்டியோடு கிச்சன் வாசலில் நின்று கொண்டிருந்த அம்மாவைப் புறக்கணித்தான் சரண். புறப்பட்டான்.
பைக் பறந்தது. இல்லை. பறக்க முற்பட்டது. அப்படிதான் சொல்லியாக வேண்டும். காரணம் தீப்தியின் பிங்க் ஸ்கூட்டி. மறித்துக்கொண்டு சரண் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.
“ஏய்? என்ன?” அதட்டினான் சரண். “காலேஜ்ல கலாட்டா பண்றது போதாதா? இப்ப வீட்டு வாசல்ல விவகாரம் பண்றே?”
“என் பேச்சை நீ கேக்கிற வரைக்கும் அப்டிதான் தொல்லை பண்ணுவேன்.”
“உம் பேச்சை என்ன? யார் பேச்சையும் நான் கேக்க மாட்டேன். கேட்டதும் இல்லை. முதல்ல நீ வழியை விடு.”
“முடியாது.”
“என்னதாண்டி ப்ரச்சனை உனக்கு?”
“ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுடா.”
“முடியாது. முடியாது.”
“ஒரே ஒரு நிமிஷம்டா.”
“இப்ப நீ வழி விடலை ஸ்கூட்டி நசுங்கிடும். ஸ்கூட்டியோட சேந்து நீயும் நசுங்கிடுவே.”
“ப்ளீஸ்டா. ப்ளீஸ்டா.. சொல்றதை…”
“என்னை எவ்ளோ சீப்பா நினைச்சிருந்தா என்னை நீ கை நீட்டி அடிச்சிருப்பே? நினைச்சாலே டென்ஷனாவுது” ஆக்ஸ்லேட்டரை முறுக்கியது சரணின் வலியக் கரங்கள். “நகரு.”
“மாட்டேன். நான் சொல்ல வந்ததை சொல்லிட்டுதான்.. ஏய்.. ஏய்.. என்னடா பண்றே?” தீப்தி அலற அலற, செயல்பட்டான் சரண்,
தன் பைக்கின் முன் வீலால் ஸ்கூட்டியின் முன் வீலை இடித்து, அதை திருப்பி, ஓரம் ஒதுக்கி, தன் பைக்கை முன்னே செலுத்தினான்.
தடாலென ஸ்கூட்டி விழ, அதன் மேலேயே சரிந்தாள் தீப்தியும். தனக்குப் பின்னால் தீப்தி கீழே விழுந்தது தெரியாமல் சரணின் பைக் பறந்தது.
வகுப்புக்குள் நுழைந்த வரதராஜன் கரும்பலகையைப் பார்த்ததும் திகைத்து நின்றுவிட்டார். எதிர்பாராமல் அவர் நின்றதில் அவருக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்த சரணும், அவர் மேலேயே மோதி நிற்கும்படி ஆனது.
வரதராஜன் போர்டைப் பார்த்தார். திரும்பி சரணைப் பார்த்தார்.
சரண் அவரைப் பார்த்தான். அப்படி என்ன போர்டில் என்று போர்டைப் பார்த்தான். தடக்கென்று திடுக்கிட்டான்.
“டியர் சரண், ஐயாம் ஸாரி. ப்ளீஸ் ஃப்ர்கிவ் மீ – தீப்தி”
“ஆளும் அழகு. கையெழுத்தும் அழகுதான் தீப்திக்கு” இப்படிதான் இருந்தது சரணின் முதல் எண்ணம். கரும்பலகையில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் எழுதியிருந்ததைப் படித்ததும்.
“எல்லார் முன்னாடியும் அறைஞ்சிட்டு ஸாரியாம் ஸாரி. பூரியாம் பூரி.”
மனம் இப்படி நினைக்க, சரணின் கண்கள் வகுப்பறையைத் துழாவின.
எழுத்துகள் மின்னிய அதே இளஞ்சிவப்பு வண்ணத்தில் மிடி ஸ்கர்ட் அண்ட் டாபிஸில் தீப்தி தென்பட்டாள்.
சரணின் பார்வை தன் மேல் விழுந்ததும், ரோஜா நிற ஆடை அணிந்த ரோஜா, கைகளால் காதுகளைப் பிடித்துக் கொண்டிருந்தது. ஒரு மன்னிப்பு கோரும் தோரணையில்.
உதடுகள் “ஸாரி” என்ற வார்த்தையை உதிர்த்தன – சப்தமில்லாமல்.
அடுத்த நொடி, ஒரு அனல் பார்வையை ரோஜா மேல் வீசிவிட்டு முள்ளாக முறைத்துவிட்டு, விறைப்பாக வெளியேறினான் சரண், வகுப்பறையை விட்டு,
படிகளில் தடதடத்தான்.
“டியர் சரண், ஸாரி, – தீப்தி” பக்கச் சுவர் எல்லாம் எழுத்துகள், ஸ்டிக்கர்கள். போஸ்டர்கள்.
காரிடாரைக் கடந்தான்.
“ஸாரி சரண். ஃப்ர்கிவ் மீ. – தீப்தி” நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு.
அந்தக் கணம் முதல், முன் மாலைப் பொழுது வரை, நூலகம், ஆய்வகம், கேண்ட்டீன் என சகல இடங்களிலும் சரணைப் பின் தொடர்ந்தாள் தீப்தி.
எழுத்துகளாலும், காகிதத்துண்டுகளாலும், மொபைலில் குறுஞ்செய்திகளாலும்.
“மன்னித்துவிடு” “மன்னித்துவிடு” என்று கெஞ்சியபடி.
நாலு மணி மாலைச் சூரியன் வெயிலில் விளையாடச் சொல்லி இளைய உலகத்தை உசுப்பிக் கொண்டிருந்தான்.
கல்லூரி பேஸ்கெட் பால் மைதானத்தில் சரண் தன்னந்தனியனாக பந்தை தட்டிக் கொண்டிருந்தான்.
எம்பி வளையத்தில் பந்தைப் போட யத்தனித்த போது, அது வளையத்தின் விளிம்பில் மோதி வெளியே விழுந்தது,
“உனக்கு கோல் விழாது. நான் சாபம் விட்ருக்கேன்”, குரல் கேட்டு சரணின் பார்வை பந்தை விட்டு விலகியது,
தீப்தி மைதானத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள்.
மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி.
“ஏன் விழாது? நான் காலேஜ் பேஸ்கெட் பால் டீம் கேப்டன். இதோ பார்.” எம்பிக் குதித்து பந்தை விசினான் சரண்.
பந்து வளையத்தில் விழாமல் நழுவியது. தவறியது.
பதில் பேசாமல் பந்தை சேகரித்த சரண், எதிர் முனை கோல் கம்பத்தை நோக்கி தட்டி சென்றான்.
அவனுக்கு இணையாக நடந்தபடி, “அப்படி என்னப் பெரிய தப்பு செஞ்சிட்டேன் நான்? எந்த நல்லப் பொண்ணா இருந்தாலும் அப்டிதான் செஞ்சிருப்பா.”
“நல்லப் பொண்ணா? எங்கே?”
“நல்லப் பையனா? எங்கே?”
“நான் நல்லப் பையன்தான்.”
“கண்ணுதான் குருடு.”
“வ்வாட்?”
“மேலே பார்.”
பார்த்தான். “ஸாரி” என்று எழுதிய இள நீலப் பலூன் ஒன்று தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தது,
“ஒரு பொண்ணு மன்னிச்சிடுன்னு சொன்னா மன்னிக்கிறவன்தான் நல்லப் பையன்.”
தட்டிய பந்தை விட்டுவிட்டு நின்றான் சரண்.
பார்வை ஒரு முறை ஏற இறங்க தீப்தியின் மேல் படர்ந்தது,
“என்ன நினைத்தானோ என்னவோ, “மன்னிச்சிட்டேன். போதுமா?” என்றான் மெதுவாக.
அவனைப் போலவே என்ன நினைத்தாளோ என்னவோ தீப்தி சடாரென்று பாய்ந்து சரணின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“தாங்க்யூ. தாங்க்யூ. தாங்க்யூ.” அவளின் உற்சாக வார்த்தைகள் மொத்த மைதானத்தையும் உற்சாகமாக்கியது.
அருகே இருந்த குல்மொஹர் மரம் ஒன்று மலர்களை இறைத்து தன் மகிழ்ச்சியை கொண்டாடியது.
சரண் திக்குமுக்காடிப் போனான்.
அவன் எதுவும் சொல்லவோ செய்யவோ அவகாசம் தரவில்லை தீப்தி.
ஒரு வழியாக அவன் கழுத்தை விடுவித்தவள், “ப்ரெண்ட்ஸ்?” என்று அவனை நோக்கி கையை நீட்டினாள்.
“நோ.” என்றான் சரண்.
“மன்னிச்சிட்டேன்னு சொன்னே?”
“ஸாரி அக்சப்ட்டட். பட் நோ ப்ரெண்ட்ஸ்.”
“ஏண்டா?”
“எனக்கு பொண்ணுங்க கூட ப்ரெண்ட்ஷிப் பிடிக்காது. இது வரைக்கும் இல்லை. எனக்கு வேணவும் வேண்டாம்.”
“பயப்படுறியாடா?”
“பயமா? எனக்கா? எதுக்கு?”
“என்னோட ப்ரெண்ட்ஷிப் இருந்தா எங்கே என்னை நீ லவ் பண்ணிடுவியோன்னு பயப்படுறே? அதானே?”
“ஆமாம். நீ மிஸ் யுனிவர்ஸ். பயம்தான். நான் உன்னை லவ் பண்ணிடுவேன்னு இல்லை. நீ என்னை லவ் பண்ணிடுவேன்னு. எதுக்கு எனக்கு தலைவலி?”
“நான் உனக்கு தலைவலியா? ஸாரி கட். பெரெண்ட்ஷிப். ஆஃபர் கட். போடா.” திரும்பி நடந்தாள் தீப்தி.
“போடி. போடி. யார் கேட்டா உன் நட்பை?”
என்றான் சரண் தீப்தியின் முதுகைப் பார்த்து.
“வருவே. பார். நீயா எங்கிட்ட ஸாரி சொல்லிக்கிட்டு.”
“பாக்கலாம். பாக்கலாம்.”
“பாக்கலாம்”.
“ஸாரி” என்று அறிவித்துக் கொண்டிருந்த பலூனைப் பார்த்த கல்லூரி வளாகம், ஒரு வழியாக சரண்- தீப்தி மோதல் முடிவுக்கு வந்தது என்று நினைத்தபோது, அந்த இருவரின் சண்டை மறுபடியும் தொடர்ந்தது, டாம் அண்ட் ஜெர்ர்யின் அடுத்த எபிசோடு போல!
வெள்ளிக்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.