அத்தியாயம் – 27
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
“ஜான்சி, நீ டிரைவ் பண்றியா?” காருக்கு அருகில் வந்ததும் செல்வா கேட்டான்.
ஒல்லிப் பெண்ணின் பெயர் ஜான்சியோ?
“ஷ்யூர்” என்ற ஜான்சியை நோக்கி கார் சாவியைத் தூக்கிப்போட்டான் செல்வா.
ஜான்சி கார் கதவு திறந்து அமர்ந்து ஸ்டியரிங்கைப் பிடித்தாள்.
“கம் சரண்”, செல்வா அழைக்க, அவனும் சரணும் பின் சீட்டில் அமர்ந்துகொள்ள கார் விரைந்தது.
“எங்கே செல்வா?”
“இந்தியன் ஹவுஸ்.”
சரண் மனதில் தீப்தியைப் பார்க்கப் போகிறோம் என்கிற பரபரப்பு மிதமிஞ்சித் ததும்பியது.
அந்த இந்தியன் ஹவுஸ் உணவக மேஜையில் அமர்ந்தபடி தீப்தியைப் பார்த்தபோதோ அவன் இதயம் அவனை விட்டு வெளியேத் துள்ளிக் குதித்தது.
தீப்தியோடு ரகசியமாக கை குலுக்கியது.
“ஹாய்” அவள் கண்களை ஏறிட்டான் சரண்.
“ஹாய் சிங்கர்”, இயல்பாக சொன்ன தீப்தி, ஒரு நொடிதான் சரண் கண்களை சந்தித்தாள். அடுத்த நொடி, “ஹாய் டியர்” என்று செல்வாவை நோக்கிப் புன்னகைத்தாள்.
அவனோ, சரணை ஒரு தள்ளு தாள்ளிவிட்டு, “ஹலோ மை லவ்லி ஸ்வீட்டி, பியான்ஸி” என்று தீப்தியின் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.
ஜான்சிக்குப் பக்கத்தில் அமர வேண்டி நேர்ந்தது சரணுக்கு.
எப்போ தீப்தியைப் பார்ப்போம் என்றிருந்த சரணுக்கு அவளும் செல்வாவும் வழிவதைப் பார்த்ததும் ஏண்டா இதைப் பார்க்கிறோம் என்றாகிவிட்டது.
“சார் யுவர் ஆர்டர்”, என்றபடி பேரர் வந்திராவிட்டால் அங்கு ஒரு, இல்லையில்லை இரண்டு கொலை நடந்திருக்கும்.
உணவு எதுவும் ருசிக்கவில்லை சரணுக்கு. சொல்லப்போனால் எல்லாமே பாவக்காயாக கசந்தது.
தீப்தி வெளிப்படையாகவே சரணை தவிர்த்தாள். அதைவிட அதிக வெளிப்படையாக செல்வாவைக் கொஞ்சினாள்.
ஜோக் என்று நினைத்து செல்வா உளறிய உளறல்களுக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“யூ லுக் கிரேட் தீப்தி, இன் திஸ் பர்ப்பிள் டிரெஸ்”, செல்வாவின் பாராட்டுக்கு, “நீதானே வாங்கிக்கொடுத்தாய் செல்வா? மறந்துட்டியா?”
“யெஸ். யெஸ். நான்தான் வாங்கிக்கொடுத்தேன். ஆனாலும் இந்த டிரெஸ் நான் வாங்கும்போது இவ்வளவு அழகாக இல்லை.”
செல்வாவின் வார்த்தைகள் சரணுக்கு ஆச்சரியம் அளித்தது. அட, இந்த மழுமழுத்த தலையன் இப்படி எல்லாம் கூட ரொமாண்டிக்காகப் பேசுவானா என்ன? வியப்பாகத்தான் இருந்தது.
வெறுப்பாகவும் இருந்தது என்று சொல்லத் தேவையில்லை.
எரிகிற வெறுப்புத் தீயில் மெலும் எண்ணெய் வார்த்தது சரண் மேல் வீசிய தீப்தியின் இளக்காரப் பார்வை.
சரணுக்குள் ஏதோ ஒன்று பற்றிக்கொண்டது.
பக்கத்தில் அமர்ந்திருந்த ஜான்சியைப் பார்த்தான். புன்னகைத்தான். “யூ லுக் கிரேட் ஜான்சி, இன் திஸ் யெல்லோ டிரெஸ்”, என்றான்.
அவளோ, “ஐயாம் எங்கேஜ்டு”, என்றாள் பொட்டென்று.
உடைந்த மூக்கை எடுத்து ஒட்டவைக்க சரண் முயற்சிக்க, தீப்தியின் கண்களும் முகமும் அவனைப் பார்த்துப் பரிகசித்தன.
அவள் சிரிப்பை அவளாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை.
நால்வரும் வீடு திரும்பிய பிறகும் தீப்தியின் பரிகாசம் சரணை துரத்திக் கொண்டேயிருந்தது.

ஜான்சியும் வீட்டுக்குள் நுழைய சரணுக்குப் புதிராக இருந்தது. புரிந்துகொண்டவள் போல தீப்தி, “நீ இப்பல்லாம் அடிக்கடி எங்களோடவே ஸ்டே பண்ணிடுறே ஜான்சி” என்றாள்.
ஒரு நொடி திருதிருவென்று விழித்த ஜான்சி, “சோ வ்வாட்?” அடுத்த நொடி சமாளித்துக்கொண்டாள்.
சரணின் அறையை நோக்கி நகர்ந்தாள். சரண் திடுக்கிட்டான். அதற்குள் தீப்தி, “ஜான்சி, என் ரூம் இந்தப் பக்கம்.”
எனவும், “ஓ… ஓகே… ஸாரி” என்று சரணைப் பார்த்து முனகிவிட்டு தீப்தியின் அறையில் புகுந்து கொண்டாள்.
“ஸீ யூ டுமாரோ பாய்ஸ். குட் நைட்”, என்றுவிட்டு தீப்தியும் ஜான்சியைத் தொடர்ந்தாள்.
ஆனால் போவதற்கு முன் செல்வாவை நோக்கி ஒரு முத்தத்தைப் பறக்கவிட்டவள், சரணை நோக்கி ஒரு கேலிப் பார்வையை வீசத் தவறவில்லை.
தீப்தியை நேரே சந்தித்தும் அவள் கூட ஒரு வார்த்தை கூடத் தனியாகப் பேச சந்தர்ப்பம் தராத அந்த நாளை சபித்தான் சரண், தன் படுக்கையில் புரண்டபடி.
உறக்கம் வரவில்லை.
அறையை ஒட்டியிருந்த பால்கனிப் பக்கம் சென்றான். வானத்தில் விண்மீன்கள் இவனுக்காக காத்திருந்தன.
சரணுக்குத் தன் வீட்டு மொட்டை மாடியும் தீப்தி அறை ஜன்னலின் ரோஜா வண்ணத் திரைச்சீலையும் நினைவில் மோதியது. அதில் தீப்தியின் முகம் நிழலாடியது.
உண்மையிலேயே அவனுக்கு அருகில் அரவம். அது தீப்தி அறையின் பால்கனி. அங்கே தீப்தி நின்று கொண்டிருந்தாள்.
இவனை அவள் பார்க்கிறாளா என்று இருளில் சரிபடப் புரியவில்லை சரணுக்கு.
ஆனால் அவள் விழிகளைத் துடைத்துக்கொள்வதை மட்டும் அந்த இருளிலும் இவனால் உணர முடிந்தது.
“தீப்தி..” இவன் உதடுகள் மிக மெதுவாக உச்சரித்தன. அந்த ஒலி அளவு நிச்சயமாக சில அடிகள் தள்ளியிருந்த தீப்தியின் செவிகளுக்கு கேட்டிருக்க வழியே இல்லை.
ஆனாலும் தீப்தி இவனை நோக்கித் திரும்பினாள். அழைக்கப்பட்டவள் போலவே!
சில அழைப்புகள் செவிகளுக்கு வேண்டுமானால் கேட்காமல் இருக்கலாம். ஆனால் இதயங்ககளை எட்டிவிடும். உணர்வுகளைத் தொட்டுவிடும்.
அந்த அடர்த்தி இருளிலும், தனக்கே தனக்கான தீப்தியை சரண் அந்த தருணத்தில் தன் கண்ணெதிரே காணக் கண்டான்.
ஒரு நொடிதான்.
அடுத்த வினாடி, தீப்தி அங்கிருக்கவில்லை.
இப்போது நெகிழ்வதும், விழிகளைத் துடைத்துக்கொள்வதும் சரணின் முறையாயிற்று.
வானத்தில் விண்மீன்கள் இரவோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தன.
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.