அத்தியாயம் – 28
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
இரவின் சோகங்கள் எனக்குத் தெரியாது என் வேலை விடிவது என்று விடிந்து விட்டிருந்தது அந்தக் காலை.
“கமான் கய்ஸ், கல்யாணத்துக்காக ஷாப்பிங் போகணும் நாம். சீக்கிரம் கிளம்புங்க”, கண் விழித்தக் கையோடு பரபரத்தான் செல்வா. மற்றவர்களையும் பரபரக்க வைத்தான்,
“லேடீஸ். கெட் ரெடி. க்விக்” என்று இரணடு பெண்களையும் விரட்டியவன்,
ஸிங்கர் சார் நீங்களும்தான்” என,
“நான் எதுக்கு?” தயங்கினான் சரண்.
“இங்கத் தனியா என்னப் பண்ணப் போறீங்க? ஜாயின் அஸ்.”
“எனக்கொண்ணும் வாங்க வேண்டியது இல்லை”, மறுபடியும் மறுத்தான் சரண்.
“அட சும்மா வாங்க சிங்கர் சார். எங்களுக்கு கேரி பேக் கேரி பண்ணவாவது” செல்வா சிரிக்க,
அவன் மொழுமொழு தலையில் சரசரவென ஓங்கி ஓங்கி குட்டினான் சரண் – தன் மனத் திரையில்.
நால்வரும் காரில் புறப்பட்டார்கள். “நான் ஓட்டுகிறேன்” என்று தீப்தி ஸ்டியரிங்கைப் பற்றிக்கொண்டாள். பக்கத்தில் ஜான்ஸி, அது வாங்கணும் இது வாங்கணும் அங்கப் போகணும், இங்கப் போகணும் என்று பட்டியலிட்டுக் கொண்டே வந்தாள்.
அதை மறந்துட்டியே இதை மறந்துட்டியே என்று செல்வா அந்தப் பட்டியலை நீளப்படுத்திக்கொண்டே வந்தான்.
தீப்தி கருமமே கண்ணாக காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
சரணுக்கு அவனில் கிடக்கும் ரொட்டி மாதிரி வெந்து வெந்து கொண்டிருந்தான். உள்ளுக்குள் நொந்து கொண்டிருந்தான்.
ஒரு புயலே பொங்கிக் கொண்டிருந்தது அவன் நெஞ்சுக்குள்.
கல்யாணப் பெண்ணுக்கான உடைகள் நகைகள் வாங்குகையில் மணமகள் தீப்தியை விட ஜான்ஸி உற்சாகமாக இருந்தாள். “அந்தப் பெண்டண்ட் வாங்கிக்க தீப்தி. டிசைன் சூப்பரா இருக்கு.”
“இந்த லாவண்டர் டிரெஸ் வாங்கிக்க தீப்தி மணப்பெண்ணுக்கு அதாவது உனக்குப் பொருத்தமா இருக்கும்.”
“இந்த ப்ளாக் கவுன் வாங்கிக்க தீப்தி. ஆஃப்டர் மேரேஜ் பார்ட்டிக்கு செமயா இருக்கும்.”
ஜான்சி சொன்ன அத்தனையும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் தீப்தி. “ஷ்யூர் ஷ்யூர். எல்லாத்தையும் வாங்கிக்கலாம். வாடெவர் யூ சே மை டியர் ஜான்சி.”
ஜான்சி தீப்தியின் ஆடை அணிகலன்கள் விவகாரத்தில் மட்டுமில்லை செல்வாவின் ஆடைத் தேர்வுகளிலும் மூக்கை நுழைத்தாள்.
சில பெண்களுக்கு யாருக்கு வாங்குகிறோம் என்ன வாங்குகிறோம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இரண்டாம் பட்சம்.
ஷாப்பிங் என்றாலே உற்சாக சிறகு முளைத்துவிடுகிறது.
செல்வாவின் ரசனையும் படு மோசமாகத்தான் இருந்தது.
ஜான்சியின் உதவி இல்லையென்றால் அவனின் உடைத் தேர்வுகள் சகிக்கமுடியாததாக இருந்திருக்கும். கல்யாண மேடையில் பொலிவற்று தெரிந்திருப்பான்.
மொத்த ஷாபிங்கும் முடிந்தபிறகு மெக் டொனால்ஸில் பசியைத் தீர்த்துக்கொண்டார்கள்.
தீப்தி களைப்பாகத் தெரிந்தாள். ஜான்சியிடமும் பேச்சு குறைந்திருந்தது. சோர்வு அவளையும் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
“லெட் அஸ் கோ தி மேரேஜ் வென்யூ”, என்று அச்சமயம் ஸ்டியரிங் பிடித்திருந்த செல்வா சொன்னபோது, “நோ” என்று அலறினாள் ஜான்சி. “வீ ஆர் டயர்டு செல்வா. இல்லை தீப்தி?” என்று தீப்தியையும் துணைக்கழைத்துக்கொண்டாள்.
“நீ போய் சரணுக்கு மேரேஜ் ஹாலைக் காட்டு. நாங்க லேடீஸ் வீட்டுக்குப் போகிறோம்.” என்று அறிவித்தாள்.
அன்றைக்கு என்னவோ எல்லாமே ஜான்சி சொல்கிறபடிதான் நடந்தது.
ஜான்சியும் தீப்தியும் கூடவே வாங்கிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வீட்டில் கொட்டிவிட்டு, செல்வாவும் சரணும் கல்யாணம் ப்ளஸ் கச்சேரி ஹாலை நோக்கி விரைந்தனர். அந்த சாம்பல் நிறக் காரில்.
“ஆக்சுவலா இது ஒரு ஆடிட்டோரியம் சரண். திருமண மண்டபம் இல்லை. அமெரிக்காவில் திருமண மண்டபத்துக்கு எங்கப் போறது? அதனால நம்ம அமெரிக்க வாழ் இந்தியர்கள் சங்கத்துக்கான ஆடிட்டோரியம் இது. இதையே கல்யாண மேடையாக்கிட்டோம்”, விளக்கினான் செல்வா.
“இந்தப் பக்கம் கல்யாணம். அந்தப் பக்கம் கச்சேரி.” என்று புன்னகைத்தான்.

“என்ன சொல்லுங்க சிங்கர், மனசுக்குப் புடிச்சப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறது எவ்ளோ பெரிய மகிழ்ச்சியான விஷயம் தெரியுமா? ஐயாம் இன் ஹெவன் சிங்கர்”, செல்வாவின் முகத்தில் அப்படியொரு பிரகாசம்.
“என் மனைவிக்கு நான் இந்த உலகத்தையே சொர்க்கமாக்கி விடுவேன் சிங்கர், அவள் என்னோடு வாழும் நாட்களில். ஐ லவ் ஹர் சோ மச். ஸோ ஸோ மச்.”
உருகினான் செல்வா. கண்ணோரம் கூட லேசாக கசிந்தது எனலாம்.
தொடர்ந்து ஏதேதோ மகிழ்ச்சியாக உணர்ச்சிகரமாக காதலைப் பற்றியும் அது கலயாணத்தில் கை கூடுகிற ஆனந்தத்தைப் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான் செல்வா.
அவன் பேசப் பேச சரண் உடைந்தான். நொறுங்கினான். சில்லு சில்லாக சிதறினான்.
“உன் கல்யாணத்தில் நான் பாடுகிறேன் பார்” என்று தீப்தியிடம் சவால் விட்டு, வீம்பாக வீறாப்பாக இப்படி அமெரிக்கா புறப்பட்டு வந்தது பெரும் தவறோ என்று தோன்றியது சரணுக்கு.
இதை விட துயரம் வேறன்ன இருக்க முடியும் – கலங்கித் தவித்தது அவன் காதல் உள்ளம்.
வெள்ளிக்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.